ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு.. கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா!
பெங்களூர்: கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் கேட்டதாக குற்றம்சாட்டி காண்ட்ராக்டர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்த விவகாரத்தில் வழக்குப்பதியப்பட்ட நிலையில் ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து வழங்கினார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இவரது அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக பாஜக மூத்த தலைவர் ஈசுவரப்பா உள்ளார்.
இந்நிலையில் தான் பெலகாவி மாவட்டம் இண்டல்காவை சேர்ந்தவர் சந்தோஷ் கே பட்டீல். இவர் அரசு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் முடித்தார். இதற்கு பணம் விடுவிக்கப்படவில்லை.

வழக்குப்பதிவு
இதனால் சந்தோஷ் கே பட்டீல் உடுப்பியில் உள்ள தனியார் தங்கும் விடுதி அறையில் விஷம் குடித்து சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்தார். முன்னதாக முடித்த அரசு பணிகளுக்கான பணம் விடுவிக்க அமைச்சர் ஈசுவரப்பா 40 சதவீதம் வரை கமிஷன் கேட்டதால் தற்கொலை செய்வதாக கூறியிருந்தார். அதனடிப்படையில் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
இதையடுத்து ஈஸ்வரப்பாவை அமைச்சரவையில் இருந்து நீக்கி அவரை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஈஸ்வரப்பா நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கட்சி மேலிட உத்தரவுப்படி அவர் ராஜினாமா முடிவை அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

ஈஸ்வரப்பா ராஜினாமா
அதன்படி அவர் இன்று சிவமொக்காவில் இருந்து ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாக ஈஸ்வரப்பா பெங்களூர் வந்தார். அங்கு முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவருடன் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் இருந்தனர்.

நிரபராதியாக வருவேன்
முன்னதாக, ஈஸ்வரப்பா கூறும்போது, ‛‛என்னால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. என்மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதனால் விசாரணை முடிவில் நான் நிரபராதி என்பது தெரியவரும்'' என நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இதேபோல் தான் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், ஈஸ்வரப்பா மீது போலி குற்றச்சாட்டு சுமர்த்தப்பட்டுள்ளது. அவர் விரைவில் நிரபராதி என்பது தெரியவரும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications