Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த ஆண்டு கர்நாடகா தேர்தல்.. கெம்பே கவுடாவை புகழ்ந்து தள்ளி பிரதமர் மோடி ஒக்கலிகா ஓட்டு வேட்டை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி, கர்நாடகாவின் பெரும்பான்மை சமூகமான ஒக்கலிகா கவுடா வாக்குகளை அறுவடை செய்ய மன்னர் கெம்பே கவுடா சிலையை திறந்து வைத்து புகழாரம் சூட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக விதான சவுதாவில் உள்ள துறவி கவிஞர் ஸ்ரீ கனகதாசர் மற்றும் வால்மீகி மகரிஷி சிலைகளுக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார் மற்றும் ஸ்ரீ நடபிரபு கெம்பேகவுடாவின் 108 மீட்டர் உயர வெண்கலச் சிலையை அவர் திறந்து வைத்தார்.

வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கர்நாடகாவின் இருபெரும் ஆளுமைகளின் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் துறவி கனக தாஸ் மற்றும் ஒனகே ஓபவ்வா ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். சென்னை, பெங்களூரு மற்றும் பாரம்பரிய நகரமான மைசூருவை இணைக்கும் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' முதல் வந்தே பாரத் ரயிலை கர்நாடகா இன்று பெற்றுள்ளதாக பிரதமர் கூறினார். கர்நாடக மக்களுக்கு அயோத்தி, காசி மற்றும் பிரயாக்ராஜ் தரிசனத்தை வழங்கும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் இன்று தொடங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

விமான நிலையம்

விமான நிலையம்

பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 குறித்து பேசிய பிரதமர், நேற்று பகிரப்பட்ட படங்களை விட உள்கட்டமைப்பு மிகவும் அழகாகவும், பிரமாண்டமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், நடபிரபு கெம்பேகவுடாவின் சிலை குறித்து விளக்கமளித்த பிரதமர், பெங்களூரு மற்றும் இந்தியாவை எதிர்காலத்தில் கட்டமைக்க இது உத்வேகமாக செயல்படும் என்று கூறினார். ஸ்டார்ட்அப் உலகில் இந்தியாவின் அடையாளத்தைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்த அடையாளத்தை வரையறுப்பதில் பெங்களூரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். "பெங்களூரு இந்தியாவின் புத்தொழில் துவக்க உணர்வின் பிரதிநிதித்துவம் ஆகும், மேலும் இந்த உணர்வுதான் நாட்டை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனித்து நிற்கச் செய்கிறது" என்று மோடி குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி பெங்களூருவின் இளைஞர்களின் உணர்வை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

விமான நிலைய மேம்பாடு

விமான நிலைய மேம்பாடு

வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை விளக்கிய பிரதமர், நகரங்களுக்கிடையேயான இணைப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அது காலத்தின் தேவை என்றும் கூறினார். கெம்பேகவுடா விமான நிலையத்தின் புதிய முனையம்-2 இணைப்புகளை அதிகரிக்க புதிய வசதிகளையும் சேவைகளையும் சேர்க்கும் என்று பிரதமர் கூறினார். விமானப் பயணத்தைப் பொறுத்தவரை உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்றும், விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் 70 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன, ஆனால் இன்று இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 140 ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். "விமான நிலையங்கள் தொழில்களை விரிவுபடுத்துவதற்கான புதிய களத்தை உருவாக்குகின்றன, அதே நேரத்தில் இளைஞர்களுக்கு நாட்டில் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன" என்று திரு மோடி குறிப்பிட்டார்.

ஆன்மீக தலங்கள்

ஆன்மீக தலங்கள்

நாட்டின் பாரம்பரியம் குறித்து செங்கோட்டையில் இருந்து ஆற்றிய தமது உரையை நினைவுகூர்ந்த பிரதமர், நமது பாரம்பரியம் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் சார்ந்தது என்று கூறினார். பாரத் கௌரவ் ரயில் மூலம் நம்பிக்கை மற்றும் ஆன்மீக ஸ்தலங்கள் இணைக்கப்படுகின்றன என்றும் அதே நேரத்தில் ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ரயிலின் இதுவரை 9 பயணங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். "ஷீரடி கோயில், ஸ்ரீ ராமாயண யாத்திரை, திவ்ய காசி யாத்திரை என எல்லாமே பயணிகளுக்கு மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது." கர்நாடகாவில் இருந்து காசி, அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களுக்கு இன்று தொடங்கிய பயணம் கர்நாடக மக்கள் காசி மற்றும் அயோத்திக்கு செல்ல உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கெம்பே கவுடாவுக்கு புகழாரம்

கெம்பே கவுடாவுக்கு புகழாரம்

நடபிரபு கெம்பேகவுடா அவர்களை நினைத்தபடி பெங்களூருவின் வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். "இந்த நகரத்தின் குடியேற்றம் இங்குள்ள மக்களுக்கு கெம்பேகவுடா அவர்களின் பெரும் பங்களிப்பாகும்," என்று அவர் மேலும் கூறினார். பெங்களூரு மக்களின் வசதிக்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் என்று வரும்போது, இணையற்ற விவரங்களை பிரதமர் எடுத்துரைத்தார். அவரது தொலைநோக்கு பார்வையின் பலனை பெங்களூரு மக்கள் இன்னும் பெற்று வருகின்றனர்" என்று திரு மோடி மேலும் கூறினார். இன்று வணிகங்கள் மாறியிருந்தாலும், பெங்களூரின் வணிக உயிர்நாடியாக 'பெட்' (பெங்களூருவில் உள்ள ஒரு பகுதி) இன்னும் உள்ளது என்று அவர் மேலும் விவரித்தார். பெங்களூரின் கலாச்சாரத்தை செழுமைப்படுத்துவதில் நடபிரபு கெம்பேகவுடா அவர்களின் பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், புகழ்பெற்ற கவி கங்காதரேஷ்வர் கோவில் மற்றும் பசவனகுடி பகுதியில் உள்ள கோவிலுக்கு எடுத்துக்காட்டினார். இவற்றின் மூலம் பெங்களூரின் கலாச்சார உணர்வை கெம்பேகவுடா அவர்கள் என்றென்றும் உயிர்ப்புடன் வைத்திருந்தார் என்று பிரதமர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+