Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கை,கால் கட்டி வாயில் டேப் ஒட்டி 82 வயது மூதாட்டி கொலை வழக்கு.. 3 பேரை பிடித்துக் கொடுத்த "கோஹ்லி"

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் 3 பேரை கைது செய்ய காரணமாக அமைந்த கிங் கோலி என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூர மகாலட்சுமிபுரத்தில் வசிக்கும் கமலா என் ராவ் எனும் கமலம்மா. அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் டேப் அடிக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Do you know how police nabbed the accused involve in 82 years old woman murder?

இந்த மரணம் மே 27 ஆம் தேதி நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். விசாரணையில் சித்தராஜு, அசோக் மற்றும் அஞ்சனமூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் அசோக் பிளம்பங் வேலை செய்து வருகிறார்.

இந்த அசோக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கமலா வீட்டில் பிளம்பிங் வேலை செய்வதற்காக வந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துள்ளார். மேலும் அந்த மூதாட்டிக்கு நிறைய நகை, பணம் இருப்பதையும் வசதியாக வாழ்வதையும் அசோக் கண்டறிந்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் யார் வெல்வார்கள் என்பதை பந்தயம் கட்ட கடன் வாங்கியதாக தெரிகிறது.

அசோக்கின் நண்பர்கள்தான் இந்த அஞ்சனமூர்த்தியும் சித்தராஜுவும் பந்தயம் கட்ட ரூ 7 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தனர். இந்த கடன் கழுத்தை நெரித்ததால் பணத்திற்கு என்ன செய்வது என யோசித்த இவர்களுக்கு அசோக்தான் ஐடியா கொடுத்துள்ளார். மூதாட்டி தனியாக இருக்கிறார். அவர் வீட்டில் கொள்ளையடித்து கடனை அடைக்கலாம் என்று!

இதற்கு மற்ற இருவரும் ஓகே சொல்லியுள்ளனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கமலாவிடம் உள்ள வணிக இடத்தை வாடகைக்கு கேட்பதாக கூறி ஆட்டோவில் இவர்கள் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததை அறிந்தனர். இதையடுத்து மூவரும் திரும்பி வந்துவிட்டனர்.

இதையடுத்து இரண்டாவது முயற்சியாக சித்தராஜுவும் அஞ்சனமூர்த்தியும் ஆட்டோவில் கமலாவின் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அசோக்கை கமலாம்மாளுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால் அவர் வெளியே காத்திருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த சித்தராஜுவுக்கும் அஞ்சனமூர்த்திக்கும் கமலாம்மாள் பிஸ்கெட் சாப்பிட கொடுத்துள்ளார்.

அப்போது மூதாட்டியை படுக்கையறைக்கு இழுத்து சென்று கை, கால்களை கட்டியுள்ளனர். மேலும் மூதாட்டி சப்தம் போடாமல் இருக்க வாயில் டேப் ஒட்டியுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு மூதாட்டியை கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். இந்த நிலையில் மூவரும் வந்து சென்ற காட்சிகள் அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

Do you know how police nabbed the accused involve in 82 years old woman murder?

ஆனால் இவர்களது முதல் முயற்சியிலேயே ஆட்டோவில் இருந்த நம்பர் பிளேட்டை கழற்றி வைத்துள்ளனர். ஆனால் அந்த ஆட்டோவின் பின்னால் கிங் கோலி என எழுதப்பட்டிருந்ததை மறைக்க மறந்துவிட்டனர். பொதுவாக தவறு செய்பவர்கள் ஏதாவது ஒரு ஆதாரத்தை விட்டுச் செல்வார்கள் என சட்டம் சொல்லும் நிலையில் அது கிங் கோலி என்ற தடயமாக இருந்தது.

இதையடுத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 3 பேரையும் மைசூரில் வைத்து கைது செய்தனர். விசாரணையில் மூதாட்டி வீட்டில் திருடிய நகைகளை விற்று கடனை அடைத்துவிட்டதாக மூவரும் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+