5 முறை அடுத்தடுத்து அதிர்ந்த பூமி.. நில நடுக்கம் என மக்கள் பீதி.. பெங்களூர் அருகே பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சிக்பல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி உள்ளிட்ட கிராம பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவில் நான்கு முறை என மொத்தமாக 5 முறை நிலநடுக்கத்தை கிராம மக்கள் உணர்ந்ததால் பீதியடைந்துள்ளனர்.
கர்நாடகாவில், பெங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ளது சிக்பல்லாப்பூர் மாவட்டம்.
இங்குள்ள, சிந்தாமணி, மிட்டஹள்ளி, அப்சனஹள்ளி,கொடகன்லு ஆகிய கிராமங்களில் நேற்று மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

பாத்திரங்கள்
வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்டவை உருண்டோடின. இந்த நிலையில் நேற்றிரவு 8 மணி, 11 விடியற்காலை 4 மணி, 5மணிக்கும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் தங்காமல் பொதுவெளியில், வீடுகளுக்கு முன்பாக காத்து கிடந்தனர்.

கலெக்டர் விசிட்
இதையடுத்து, சிக்பள்ளாப்பூர் கலெக்டர் ஆர்.லதா, போலீஸ் சூப்பிரண்டு ஜி.கே.மிதுன் குமார் ஆகியோர், புவியியலாளர் குழுவுடன் அங்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் நேரில் சென்று விவரம் கேட்டறிந்தனர்.

பூகம்பம் இல்லை
லதா கூறுகையில், மிட்டஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பீதியடையத் தேவையில்லை, ஏனெனில் இது பூகம்பம் இல்லை. அவர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடரலாம் என்றார். கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தில் (கேஎஸ்என்டிஎம்சி) ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் பற்றி எதுவும் பதிவாகவில்லை.

என்ன ஒலி
இருப்பினும், புவியியலாளர்கள் குழு ஒன்று அந்த கிராமத்திற்கு அனுப்பப்பட்டது, அங்கு அவர்கள் ஒரு வார காலத்திற்கு அது என்ன ஒலி என்பதை கண்காணிப்பதற்காக முகாமிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிட்டஹள்ளியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் நிருபர்களிடம் கூறுகையில், மூன்று அல்லது நான்கு முறை பெரிய ஒலி மற்றும் அதிர்வு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் பீதிக்கு ஆளாகினர். ஆனால், கிராமத்திற்கு உயர் அதிகாரிகள் வந்திருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.

மக்கள் பயம்
ஏதோ தவறு நடக்குமோ என்ற பயத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தோம் என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த நீலம்மா என்பவர் தெரிவித்தார். ஆனால் கட்டிடத்தில் விரிசல் ஏதும் ஏற்படவில்லை, மின்கசிவு அல்லது பொருட் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதால் இந்த சத்தம் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. லேசான நில நடுக்கம் என்பதால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்று பொது மக்கள் நினைக்கிறார்கள். நில நடுக்கம் இல்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications