15 நாள் பரோல் கேட்கிறார் இளவரசி... பெங்களூர் சிறைக்கு போனபிறகு முதல்முறையாக கோரிக்கை!
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் இளவரசி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திடீரென உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூர் நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிது மாதங்களிலேயே இளவரசிக்கு உடல்நிலை சரியில்லை என சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரரை பார்க்க இளவரசி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த பரோல் மனு ஆய்வில் உள்ளதாக பெங்களூர் சிறை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சிறைக்கு சென்று ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில் முதல் முறையாக இளவரசி பரோல் கேட்டுள்ளார். சசிகலாவும் அவரது கணவர் நடராஜன் காலமானதை அடுத்து இறுதி சடங்கில் பங்கேற்க கடந்த மார்ச் மாதம் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications