விபத்தில் சட்டென தீப்பிடித்த பஸ்! காப்பாற்றும்படி கதறிய 7 பேர் உடல் கருகி பலி! கர்நாடகாவில் சோகம்
பெங்களூர்: கேவாவில் இருந்து கர்நாடகம் வழியாக ஐதரபாத் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் இன்று விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. இதில் காப்பாற்றும்படி கதறிய 7 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்த நிலையில் 22 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவாவில் இருந்து கர்நாடகம் வழியாக ஐ தரபாத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றனர். இதேபோல் நேற்று இரவு கோவாவில் இருந்து தனியார் பஸ் ஐதராபாத் புறப்பட்டது.
பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இன்று காலை கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் கமலாபுரா டவுன் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.

விபத்தில் தீப்பிடித்த பஸ்
அப்போது திடீரென்று பஸ்சும், சரக்குவாகனமும் மோதிக்கொண்டன. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் அடுத்த நொடி பஸ் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து வெளியேற முயன்றனர். பஸ் கவிழ்ந்து தீப்பற்றியதால் அவர்களால் எளிதில் வெளியே வரமுடியவில்லை.

தீயில் சிக்கி 7 பேர்
இதனால் கண்ணாடியை உடைத்துக்கொண்டு காயங்களுடன் ஏராளமானவர்கள் வெளியேறினர். ஆனால் 7 பேர் தீயில் சிக்கினர்.இவர்களால் பஸ்சில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர்கள் உயிருடன் தீயில் கருகி எரிந்தனர். காப்பாற்றும்படி அவர்கள் அலறினர். இதையடுத்து சகபயணிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பஸ்சில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

உடல் கருகி இறந்த 7 பேர்
இதனால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எலும்புக்கூடாக காட்சியளித்த பஸ்சில் 7 பேர் உடல் கருகி இருந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. உடல்கள் முற்றிலுமாக எரிந்து இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது. இதனால் இறந்தவர்களின் பெயர், விபரங்கள் தெரியவில்லை. உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிர் தப்பிய 22 பேர்
இதுபற்றி போலீசார் விசாரணையை துவக்கினர். முதற்கட்ட விசாரணையில் தீப்பற்றி எரிந்த பஸ்சானது கோவாவில் இருந்து கலபுரகி மாவட்டம் வழியாக ஐ தரபாத் நோக்கி சென்ற நிலையில விபத்தில் சிக்கி தீப்பிடித்தது தெரியவந்தது மேலும் பஸ்சில் மொத்தம் 29 பயணிகள் இருந்த நிலையில் 22 பேர் உயிர் தப்பிய நிலையில் 7 பேர் இறந்ததாக போலீசார். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications