எல்லோருக்கும் ரூல்ஸ் ஒன்னுதான்! மதத்தை காட்ட ஸ்கூல் இடம் கிடையாது! ஹிஜாப் பற்றி குஷ்பு பரபர கருத்து
பெங்களூர்: கர்நாடகாவில் பியு கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டு இருக்கும் தடை குறித்து பாஜக உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வர கர்நாடகாவில் உள்ள பல்வேறு பியு கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உடுப்பி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஹிஜாப்
இந்த ஹிஜாப் விவகாரத்தில் மாணவிகள் வைக்கும் கருத்து, நாங்கள் பல வருடங்களாக இப்படித்தான் வகுப்பிற்கு வருகிறோம். அப்போதெல்லாம் இதை யாரும் பிரச்சனையாக்கவில்லை. அப்போது ஹிஜாப் அணிவது இவர்களுக்கு பிரச்சனையாக இல்லை. இப்போது திடீரென ஹிஜாப் அணிய கூடாது என்று சில இந்துத்துவா மாணவர்கள் போராடுகிறார்கள். இவர்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். ஹிஜாப் எங்கள் உரிமை. அது எங்கள் மத அடையாளம் என்று மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

போராட்டம்
அதே சமயம் மாணவிகளுக்கு எதிராக போராடும் இந்துத்துவா மாணவர்கள், பள்ளி என்பது மதத்தை வெளிக்காட்டும் இடம் கிடையாது. மதத்தை காட்ட வேண்டும் என்றால் வெளியே காட்டுங்கள். அல்லது வீட்டிற்குள் இருங்கள். அதைவிட்டு ஹிஜாப்போடு பள்ளிக்கு வர கூடாது. எல்லோருக்கும் யூனிபார்ம் கொடுத்துள்ளனர். எல்லோருக்கும் விதி ஒன்றுதான். அதை அணிந்து கொண்டுதான் வகுப்பிற்கு வர வேண்டும். அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என்று இந்துத்துவா மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

என்ன காரணம்?
இந்த நிலையில்தான் தற்போது பாஜக நிர்வாகி குஷ்பு இதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், கல்வி என்பது மதத்தை பற்றியது கிடையாது. கல்வி என்பது சமத்துவம் பற்றியது. பள்ளிக்கு யூனிபார்ம் அணிந்து செல்ல வேண்டும். ரூல்ஸ் என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். கல்வி மையங்கள் என்பது உங்கள் மதத்தை காட்டும் இடம் கிடையாது.

குஷ்பு கருத்து
மாறாக கல்விக்கூடம் என்பது ஒரு இந்தியராக நீங்கள் வலிமையாக காட்ட வேண்டிய இடம். இதை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் அவமானகரமானவர்கள், என்று குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். அதாவது வகுப்பிற்கு யூனிபார்ம் அணிந்து செல்ல வேண்டும் என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார். ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான நிலையில், பள்ளக்கு ஒரே மாதிரியான சீருடையுடன் வர வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லா மாணவர்களும் யூனிபார்ம் மட்டுமே போட வேண்டும். வேறு உடைகளை அணிய கூடாது என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications