நிலவு மட்டும் இல்லை.. செவ்வாய், வெள்ளி கோளுக்கும் செல்ல முடியும்.. ஆனால்.! இஸ்ரோ தலைவர் பேச்சு
பெங்களூர்: நிலவு, செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களுக்கும் செல்லும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்றும் பிரதமர் மோடி முன்வைத்த தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
பூமியின் துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மனித சமூகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் விணகலத்தை இறக்கி ஆய்வு செய்து வருகிறது. விண்வெளித்துறையில் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் இந்தியாவின் இஸ்ரோவும் பல்வேறு சாதனைகள் செய்து வருகிறது. சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருக்கிறது.

கடந்த 2008-ல் சந்திராயன் 1 விண்கலத்தை இஸ்ரோ நிலவிற்கு அனுப்பியது. நிலவில் இருந்து அது எடுத்து அனுப்பிய ஏராளமான படங்களின் மூலம் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்தது. அதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. சாஃப்ட் லேண்டிங் செய்ய முயற்சிக்கும் போது இந்த திட்டம் பின்னடைவை சந்தித்தது.
எனினும், சந்திரயான் 2 உடன் அனுப்பப்பட்ட ஆர்ப்பிட்டர் தொடர்ந்து பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 14 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. 41 நாட்கள் பயணத்திற்கு பிறகு சந்திரயான் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. உலக வரலாற்றில் வேறு எந்த நாடும் செய்யாத சாதனை இதுவாகும்.
தென் துருவத்தில் விண்கலத்தை ஆய்வு செய்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நிலவின் தென் துருவத்தில் இந்திய விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவின் தென் துருவத்தில் ரோவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் இதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நேற்று காலை இஸ்ரோ கட்டுபாட்டு மையம் சென்ற பிரதமர் மோடி , விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து கூறினார். இந்த நிலையில், நிலவு, செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களுக்கு செல்லும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:-
நிலவு, செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களுக்கும் செல்லும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால், நமது நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும். நமக்கு அதிக முதலீடுகள் தேவை. இதன் மூலம் விண்வெளித்துறை வளர்ச்சி அடைய வேண்டும். இது நமது திட்டம் என ஒட்டு மொத்த தேசமும் மேம்படுத்த வேண்டும். பிரதமர் மோடி முன்வைத்த தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த நாங்கள் தயராக இருக்கிறோம்" என்றார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications