கர்நாடகாவில் இருமதத்தினர் இடையே மோதல்.. மூவருக்கு கத்திக்குத்து.. கடைகளுக்கு தீவைப்பு.. பதற்றம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் நேற்று இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையான நிலையில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம் மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி அருகே கெரூர் கிராமம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள பஸ் நிலையத்தில் பெண் ஒருவரை சிலர் கிண்டல் செய்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை சிலர் கண்டித்தனர். இருதரப்பினரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அடித்து கொண்டனர்.

வன்முறையான மோதல்
அதாவது அருண் கட்டிமணி மற்றும் யாசின் பென்டாரி ஆகியோருக்கு ஆதரவாக ஏராளமானவர்கள் திரண்டனர். அப்போது யாசின் பென்டாரி, இந்து பெண்ணை கிண்டல் செய்ததாக அருண் கட்டிமணி தரப்பு குற்றம்சாட்டியது. அதேநேரத்தில் தன்மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக யாசின் பென்டாரி தரப்பு அருண்கட்டிமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதையடுத்து மார்க்கெட்டுக்குள் நுழைந்து கடைகளை சூறையாடப்பட்டது. மேலும் கடைகள் மற்றும் டூவீலர்கள், பழம்-காய்கறி வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிகளுக்கு தீவைத்தனர். இதனால் மோதல் வன்முறையானது.

கல்வீச்சு-விரைந்த போலீஸ்
மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். கத்திக்குத்து சம்பவங்களும் நடந்தது. இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஓடிவிட்டனர். போலீசார் கடைகள், வாகனங்களுக்கு வைத்த தீயை அணைத்தனர்.

4 பேர் காயம்-18 பேர் கைது
இந்த வன்முறையில் 4 பேர் காயமடைந்தனர். 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 18 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு
மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் நாளைகாலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதோடு கெரூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்ய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications