அது பாம்பு இல்லை.. எனது புருஷன்! நாகப்பாம்புடன் 4 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி! அதிர்ந்த கர்நாடக கிராமம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மூதாட்டி ஒருவர், பாம்புடன் குடும்பம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் இருக்கும் அனைத்தும் நாடுகளிலும் கண்டறியப்படும் உயிரினமாகப் பாம்புகள் உள்ளன. தென் துருவ கண்டனமான அண்டார்டிக்கா தவிர உலகின் அனைத்து கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன.

வெறும் 10 செமி நீளமுடைய சிறிய பாம்பு தொடங்கி முதல் மிகவும் நீளமான மலைப்பாம்புகள், அதீத விஷம் கொண்ட நாகப்பாம்புகள் என உலகெங்கும் உலகெங்கும் சுமார் 4000க்கும் மேற்பட்ட பாம்புகள் கண்டறியப்படுகிறது.

 பாம்பு

பாம்பு

இதுபோன்ற பாம்புகள் இந்தோ-பசிபிக் நாடுகளில் தான் அதிகம் காணப்படும். அதிலும் இந்தியாவில் அதிக வகையிலான பாம்புகள் இருக்கிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாம்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது கணவரின் மறுபிறவி என நினைத்து, அந்த பாம்புடன் ஒரே வீட்டில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கர்நாடக மூதாட்டி

கர்நாடக மூதாட்டி

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள குல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதா மோனேஷா கம்பரா. இவர் பல ஆண்டுகளாகவே அந்த கிராமத்தில் தான் வசித்து வருகிறார். இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் மோனேஷா வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

பாம்பு

பாம்பு

இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மோனேஷாவின் வீட்டில் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் நாகப்பாம்பைப் பார்த்து மோனேஷா சிறிதும் பதறவில்லை. மாறாக, பாம்பு வடிவில் வந்திருப்பது தனது கணவர் என்றும், அதற்கு யாரும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இதனால் அக்கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

 மறுபிறவி

மறுபிறவி

சுமார் 4 நாட்களுக்கு அப்பெண் நாகப்பாம்பைத் தனது கணவரின் மறுபிறவி என்று நினைத்து, அதனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அக்கிராம மக்கள் மோனேஷாவிடம் பெரும் சிரமப்பட்டு ஆபத்தை விளக்கி உள்ளனர். அதன் பின்னரே பாம்பைத் தனது வீட்டிலிருந்து கிராம மக்கள் எடுத்துச் செல்ல மோனேஷா ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 நச்சுப்பாம்பு

நச்சுப்பாம்பு

நமது நாட்டில் மட்டும் சுமார் 270க்கும் மேற்பட்ட வகை பாம்புகள் உள்ளன. இதில் மிகவும் ஆபத்தான நான்கு நச்சுப்பாம்புகளை ஆய்வாளர்கள் Big Four என்று அழைக்கிறார்கள். இந்திய நாகம், கட்டு விரியன், சுருட்டைப் பாம்பு, கண்ணாடி விரியன் ஆகியவற்றைத் தான் ஆய்வாளர்கள் Big Four என்று அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆபத்தான பாம்பு வகைகளில் ஒன்றான நாகப்பாம்பு உடன் தான் அந்த மூதாட்டி 4 நாட்கள் இருந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+