Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரசிகரை கொடூரமாக கொன்ற வழக்கு! விசாரணையை குழப்ப தர்ஷன் முயற்சி.. போலீஸ் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தனது ரசிகரை கொலை செய்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும், விசாரணையில் குறுக்கீடு செய்வதற்கு அவர் தொடர்ந்து முயன்று வருகிறார் என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தவர்தான் தர்ஷன். காலம் சென்ற பழம்பெரும் நடிகரான தூகுதீபா ஸ்ரீனிவாஸின் மகனான இவர், தனது தந்தையின் மூலம் திரை துறைக்கு அறிமுகமாகியுள்ளார். சினிமா இவர் எதிர்பார்த்ததை போல இவரை உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், தீவிர முயற்சியால் தனக்கான இடத்தை தர்ஷன் தக்கவைத்துக்கொண்டார்.

Karnataka Darshan

தற்போது கோடிகளில் புரளும் டாப் ஹீரோக்களில் இவரும் ஒருவர். இவருக்கு கடந்த 2003ம் ஆண்டு விஜயலட்சுமி என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இப்படி இருக்கையில்தான் திரைத்துறையில் இவருக்கும் பிரபல நடிகையான பவித்ராவுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மனைவி விஜயலட்சுமியுடன் அடிக்கடி தகராறில் தர்ஷன் ஈடுபட்டிருக்கிறார்.

இப்படி இருக்கையில்தான் தர்ஷனின் தீவிர ரசிகராக ரேணுகா சுவாமி உள்ளே என்ட்ரி ஆகியுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தர்ஷனின் காதலியான பவித்ராவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். "உன்னால்தான் எங்க அண்ணன் குடும்பமே நாசமாகிடுச்சி" என்கிற தொனியில் பவித்ராவை இழிவுப்படுத்தி மெசேஜ் அனுப்பியுள்ளார். தொடர் ஆபாச மெசேஜ் தொல்லையை தாங்க முடியாத பவித்ரா இது குறித்து தர்ஷனிடம் முறையிட்டிருக்கிறார்.

இந்த கொலைக்கான தொடக்கப்புள்ளி இதுதான் என காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார். காதலி கண் கலங்குவதை பார்க்க முடியாத தர்ஷன், ரேணுகா சுவாமியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். இந்த திட்டத்தில் தனது கூட்டாளிகளை இணைத்துக்கொண்ட அவர், திட்டமிட்டபடி ரேணுகா சுவாமியை கடத்தி அடித்து சித்ரவதை செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் மேலோங்க சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில் நிலைகுலைந்த ரேணுகா சுவாமி உயிரிழந்திருக்கிறார்.

ரேணுகா சுவாமிக்கு சமீபத்தில் திருமணமான நிலையில், அவரது மனைவி தற்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்த சூழலில் ரேணுகாவின் கொலை வழக்கில் காவல்துறை தர்ஷன் உட்பட சிலரை கைது செய்தது. அவர்கள் ஜூன் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த காவல் மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் விசாரணையில் குறுக்கீடு செய்ய தர்ஷன் முயல்வதாக கர்நாடக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர். அதேபோல இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது பவித்ராதான் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனையடுத்து காவலை ஜூலை 22ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையில் தர்ஷன் வீட்டில் போலீசார் நடத்திய ரெய்டில் ரூ.80.40 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+