“இந்துக்களே கத்தியை கூர் செய்யுங்கள்".. சர்ச்சையை கிளப்பிய பிரக்யா.. எப்ஐஆர் போட்ட கர்நாடக போலீஸ்
பெங்களூர்: "இந்துக்கள் தற்காப்புக்காக தங்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், காய்கறி நறுக்கும் கத்தியாவது இருக்க வேண்டும்" என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் பேசியதற்காக அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹெச்.எஸ். சுந்தரேஷ் அளித்துள்ள புகாரின் பேரில் பிரக்யா தாக்குர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு வேறு சமூகத்தினர் இடையே பகையை உண்டாக்குவது, மத உணர்வுகளை தூண்டிவிடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்கு பெயர்போன பிரக்யா சிங்
போபால் பாஜக எம்பியாக இருப்பவர் பிரக்யா சிங் தாக்குர். சர்ச்சைக்கும், அதிரடி பேச்சுகளுக்கும் இவர் பெயர்போனவர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்த பிரக்யா சிங், சில ஆண்டுகளுக்கு முன்பு நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கினார். காந்தியடிகளை கொலை செய்த கோட்சவை, தேசபக்தர் என இவர் கூறியது பெரும் கண்டனங்களுக்கு உள்ளானது. விஷயம் பூதாகரமானதை அடுத்து, தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டார் பிரக்யா சிங்.

"கத்தி வைத்துக்கொள்ளுங்கள்"
இந்த சூழலில்தான், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவுக்கு பிரக்யா சிங் சில தினங்களுக்கு முன்பு பயணம் மேற்கொண்டிருந்தார். கர்நாடகாவின் இந்துத்துவா அமைப்பான ஜாக்ரன வேதிகாவின் மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரக்யா சிங், "லவ் ஜிஹாதிகளிடம் இருந்து உங்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். நம் பெண் குழந்தைகளுக்கு கலாசார மதிப்பு குறித்து பாடம் நடத்துங்கள். கர்நாடகாவில் இந்துத்துவவாதிகள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. எனவே, தற்காப்புக்காக நீங்கள் ஆயுதங்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எனவே, குறைந்தபட்சம் காய்கறி வெட்டும் கத்தியாவது வைத்துக்கொள்ளுங்கள். யாரேனும் வீட்டில் புகுந்தால் அவர்களை தாக்குங்கள்" என பிரக்யா சிங் பேசினார்.

புகார் அளித்த காங்கிரஸ்
பிரக்யா சிங்கின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் வித்திட்டது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரக்யாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்நிலையில், ஷிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரேஷ், கோட்டே காவல் நிலையத்தில் பிரக்யா சிங் மீது புகார் அளித்தார். அதில், "இந்துக்களை வீட்டில் ஆயுதங்கள் வைத்திருக்குமாறு பிரக்யா சிங் பேசியுள்ளார். அவரது பேச்சு ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும் வகையில் உள்ளது. மேலும், சகிப்பின்மை, வெறுப்பு, கலவரம் ஆகியவற்றுக்கும் அவரது பேச்சு வழிவகுப்பதாக உள்ளது" எனக் கூறப்பட்டிருந்தது.

எப்ஐஆர் போட்ட போலீஸ்
இந்த புகாரின் அடிப்படையில், கோட்டே காவல் நிலையத்தில் பிரக்யா சிங் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. மேலும், இரு வேறு சமூகத்தினர் இடையே பகையை உண்டாக்குவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பது, மத உணர்வுகளை தூண்டிவிடுவது, மத உணர்வுகளை காயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் பிரக்யா சிங் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
-
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications