பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை எடுக்க கூடாது.. அர்ச்சகர்களுக்கு கர்நாடக அரசு நூதன உத்தரவு
பெங்களூர்: கர்நாடகாவில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கிவரும் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியுள்ளது காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு.
அதேநேரம், கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஆரத்தி கொண்டுவரும்போது தட்டில் வைக்கும் காணிக்கையை எடுக்கக்கூடாது என்று தடை போட்டுள்ளது.

கர்நாடகாவில் மொத்தம், 34,000த்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இயங்கி வருகின்றன. கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கோரிக்கையை அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள், பல ஆண்டுகளாக வைத்து வந்தனர்.
இந்நிலையில் மாநில அரசு நேற்று ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு 6வது ஊதிய குழு அடிப்படையில் சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்கப்படும். பக்தர்கள் ஆரத்தி தட்டில்போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுத்து பயன்படுத்தாமல் கோயில் வருமானத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிக்கையாக வரும் பணம் அரசுக்கு சென்று, அதில் இருந்தே, அர்ச்சகர்களுக்கு கூடுதல் சம்பளப் பணத்தை ஈடுகட்டிவிடலாம் என அரசு நினைப்பது உறுதியாகியுள்ளது. கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள கோவில்களில் பெரும்பாலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனி காத்திருக்கவே வேண்டாம்.. அனைத்து கோவில்களிலும் ஆன்லைன் டிக்கெட்.. அறநிலையத்துறை அதிரடி திட்டம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications