கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சசிகலா! சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்த வழக்கில் முன்ஜாமீன்!
பெங்களூரு: பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ரூ.10 கோடியை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

பெங்களூ சிறையில் சசிகலா
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017-ம் ஆண்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். பெண்களுக்கான சிறையில் சசிகலாவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது.சசிகலா பெங்களூர் சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாக புகார் எழுந்தது.

சிறை டூ ஷாப்பிங்
மேலும் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே சென்று ஷாப்பிங் செய்து விட்டு இருவரும் சிறைக்கு திரும்பும் வீடியோ காட்சிகளும் வெளியாகின.இது தொடர்பாக டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா விசாரணை நடத்தி சிறையில் சசிகலா சொகுசாக வாழ்ந்ததை உறுதியும் செய்தார். நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கும் குற்றப்பத்திரிகையும்
சசிகலா லஞ்சம் கொடுத்தது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட விசாரணை குழுவும் உறுதி செய்தது. இதையடுத்து கர்நாடக ஊழல் தடுப்பு படையினர் சசிகலா மீது 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரி சோமசேகர், டாக்டர் அனிதா, சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி ஆகிய 7 பேர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

கிடைத்தது முன்ஜாமீன்
இவ்வழக்கை நீதிபதி லட்சுமி நாராயண் பட் விசாரித்தார். அப்போது இன்று குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி இருவரும் இன்று ஆஜராகினர். அப்போது தங்களை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க இருவரும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இதனை ஏற்று இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications