சோதீக்காதீங்கய்யா..குருநாதா இந்த தடவ புது ஐட்டத்த அனுப்பிருக்காங்க! ஆர்டர் செய்ததோ லேப்டாப்! வந்தது?
பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பிளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு ஒரு கல்லும் பழைய கம்ப்யூட்டரின் உதிரி பாகங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நீங்கள் எந்த பொருள் வாங்க வேண்டுமானாலும் நேரடியாக கடைகளுக்கு சென்று அந்த பொருட்களை பார்த்து பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளலாம் இல்லையேல் வழக்கம்போல் வீட்டிற்கு நடையை கட்டிவிடலாம்.
இதனால் வாங்கும் பொருட்களை தரம் நமக்கு நன்கு தெரிவதோடு வியாபாரி வாடிக்கையாளர்களிடையே ஒரு நல்லுறவும் இருந்தது. ஆனால் தற்போதெல்லாம் நீங்கள் அலையவே தேவையில்லை. எல்லா தேவைகளுக்கும் ஆன்லைனிலேயே தீர்வு கிடைக்கிறது.

ஆன்லைன் வர்த்தகம்
ஆனால் தற்போது டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மார்க்கெட்டிங் அபார வளர்ச்சியை சந்தித்துள்ளது. சாப்பிடும் பொருட்களில் இருந்து இரவு தூங்கும் வரை நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உங்கள் செல்போன்களில் இருக்கும் ஆப்கள் மூலம் ஆர்டர் செய்தால் உடனடியாக உங்கள் வீடு தேடி வரும். இதற்காகவே ப்ளிப்கார்ட், ஆமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.

ப்ளிப்கார்ட்
குறிப்பாக தீபாவளி புத்தாண்டு பொங்கல் உள்ளிட்ட நாட்களில் பிக் பில்லியன் டேஸ் சேல்ஸ் உள்ளிட்ட கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ப்ளிப்கார்ட் நிறுவனம் பல கவர்ச்சி ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது. அப்படி ஒருவர் பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் ஒன்றினை ஆர்டர் செய்ய அவருக்கு வந்த பொருள்தான் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

லேப்டாப் ஆர்டர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சின்மைய ரமணா என்பவர் பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். இதைஅடுத்து அவருக்கு பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்பட்டது. ஆசை ஆசையாக லேப்டாப்பை பார்க்க அந்த பார்சலை திறந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பார்சல் பெட்டிக்குள் லேப்டாப்புக்கு பதிலாக ஒரு கல்லும் பழைய கம்ப்யூட்டரின் உடைந்த உதிரி பாகங்களும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு உடனடியாக மெயில் அனுப்பி இருக்கிறார்.

கடும் கண்டனம்
மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக நெட்டிசன்கள் ப்ளிப்கார்ட் நிறுவனத்தை திட்டி தீர்த்தனர். இதையடுத்து ரமணாவுக்கு முழு பணத்தையும் திருப்பித் தருவதாக பிளிப்கார்ட் நிறுவனம் பதில் அளித்துள்ள நிலையில் இனிமேல் இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த பெண்ணுக்கு மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட வறட்டிகள் டெலிவரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தினமும் ரூ.100 கோடியை செலவு செய்யும் பெங்களூர் மாநகராட்சி! ஆனா பாருங்க.. ஒன்னும் மாறல! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications