பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.63 காசுகள் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
சென்னை: பெட்ரோல் விலையை மீண்டும் திடீரென உயர்த்தியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள். இந்த முறை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.63 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 1.63 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. வாட் வரி இதில் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால், மாநிலத்திற்கும் இந்த விலை உயர்வு மாறுபடும். அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் ரூ 2.07 உயர்ந்துள்ளது.

இதனால் சென்னையில் இன்று நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.56க்கு விற்பனை செய்யப்படும். டெல்லியில் லிட்டருக்கு ரூ.1.96 உயர்ந்து ரூ.76.06க்கு விற்பனையாகும். மும்பையில் ரூ.81.57க்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல், இனி ரூ.83.63க்கு விற்பனை செய்யப்படும்.
இது ஏழாவது முறை
ஜூன் மாதத்திற்குப் பிறகு 7-வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு இதுவரை லிட்டருக்கு ரூ.10.80 உயர்த்தப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை குறைவு, ரூபாய் மதிப்பிலும் குறிப்படத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதால் பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன. இந்த விலை குறைப்பு அறிவிப்பு வரும் 15 அல்லது 16-ம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இம்மாத துவக்கத்தில் ஏற்பட்ட ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, தற்போது எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை இரு தினங்களுக்கு முன்பே சொல்லாமல் கொள்ளாமல் உயர்த்திவிட்டன.
தற்போதைய சந்தை நிலவரம், அடுத்தமுறை பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்படும்போது கணக்கில் கொள்ளப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டீசல் விலை
அடுத்த இரண்டொரு தினங்களில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ 3 வரை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications