பங்கு சந்தை வரலாற்றில் முதல் முறையாக.. டாடா கன்சல்டன்சி நிறுவனம் புதிய சாதனை
டெல்லி: டாடா கன்சல்டன்சி நிறுவனம், பங்கு சந்தையில் இன்று புதிதாக ஒரு சாதனையை படைத்துள்ளது. பங்கு சந்தையில் 100 பில்லியன் டாலர் பங்கு மூலதனத்தை (market capitalisation) தொட்ட இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமையை டிசிஎஸ் பெற்றுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு இந்த சாதனை பதிவாகியுள்ளது. மும்பை பங்கு சந்தையில், நேற்றை நாள் முடிவில் டிசிஎஸ் பங்குகள் ரூ.3545 என்ற விலையில் இருந்தன. இன்று காலை இது 4 சதவீதம் உயர்ந்தது. இதன் மூலம், பங்கு மூலதன மதிப்பு ரூ.102.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பாக உயர்ந்தது.

இதற்கு முன்பாக பங்கு சந்தையில் எந்த ஒரு இந்திய நிறுவனத்தின் பங்கு மூலதன மதிப்பு 100 பில்லியன் என்ற மைல் கல்லை தொட்டது இல்லை. மொத்த பங்குகள் எண்ணிக்கை மற்றும் தற்போதைய அவற்றின் மதிப்பு ஆகியவற்றை பெருக்குவதன் மூலம் கிடைப்பதுதான் பங்கு மூலதனம். பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தின் மதிப்பை அறிய உதவுவது இந்த கணக்கீடுதான்.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், டிசிஎஸ் நிகர லாபம் 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது. நிகர லாபத்தின் மதிப்பு ரூ.6925 கோடியாகும். இந்த அறிவிப்பு வெளியான நிலையில், பங்கு சந்தையிலும், இதன் பங்கு மதிப்பு அதிகரித்துவிட்டது.
மற்றொரு காரணம், டிசிஎஸ் தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் அறிவித்துள்ளதும்தான். 2004ம் ஆண்டு பங்கு சந்தையில் டிசிஎஸ் நிறுவனம் லிட்ஸ் ஆன பிறகு, 2006 மற்றும் 2009ம் ஆண்டிலும் இதுபோன்ற போனசை அறிவித்தது. இப்போது மூன்றாவது முறையாக டிசிஎஸ் அறிவித்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications