Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் அக்‌ஷய்குமார் திரைப்படத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு.. போஸ்டர்கள் கிழிப்பு.. பரபர பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ள 'சூர்யவன்ஷி' என்ற திரைப்படம் தீபாவளி அன்று தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு தியேட்டர்களில் 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் ஹோஷியார்பூரில் உள்ள ஸ்வரன் தியேட்டரில் சூர்யவன்ஷி படம் ஓடிக் கொண்டிருந்தது. பார்தி கிசான் யூனியன் விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஸ்வரன் துக்கா தலைமையில் ஏராளமான விவசாயிகள் அங்கு விரைந்து வந்தனர்.

போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்

போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்

நடிகர் அக்‌ஷய் குமார் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறிய விவசாயிகள் தியேட்டர்களுக்கு வெளியேருந்த சூர்யவன்ஷி படத்தின் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். மேலும் தியேட்டர் அலுவலகத்திற்கு சென்ற விவசாயிகள் தியேட்டர் உரிமையாளர்களிடம் சூர்யவன்ஷி படத்தை திரையிடக்கூடாது என்று கூறினார்கள்.

கண்டன ஊர்வலம்

கண்டன ஊர்வலம்

முன்னதாக சூர்யவன்ஷி திரைப்படம் திரையிடப்படுவதை எதிர்த்து உதம் சிங் பூங்காவில் இருந்து ஸ்வரன் திரையரங்கம் வரை ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன ஊர்வலத்தை விவசாயிகள் நடத்தினார்கள். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நடிகர் அக்‌ஷய் குமார் திரைப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உறுதியுடன் தெரிவித்தனர். ஹோஷியார்பூரில் சூர்யவன்ஷி திரைப்படம் திரையிட்ட 5 தியேட்டர்களுக்கு விவசாயிகள் இதேபோல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மூன்று வேளாண் சட்டம்

மூன்று வேளாண் சட்டம்

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.

பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு

பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு

வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக உள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இங்கு பா.ஜ.க.வுக்கு எதிராக விவசாயிகள் பிரசாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+