பஞ்சாப் சட்டசபை தேர்தல்: பாஜகவுடன் கூட்டணி.. அமரீந்தர் சிங் அறிவிப்பு.. வெற்றி உறுதி என உற்சாகம்!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சில மாதங்களுக்கு முன்பு வரை முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். காங்கிரஸ் மூத்த தலைவரும், முதல்வருமான அமரீந்தர் சிங்குக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்குவுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது.
அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் இந்த மோதல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது. அவர் இருவரையும் டெல்லிக்கு வரவழைத்து சமாதானம் பேசினார்.

முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்
ஆனால் இது சுத்தமாக எடுபடவில்லை. அதன்பிறகும் மோதல் முற்றவே காங்கிரஸ் தலைமை நவ்ஜோத் சிங் சித்துக்கு ஆதரவாக செய்லபடுவதாக குற்றம்சாட்டிய அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் காங்கிரசில் இருந்தும் விலகினார். இதனால் அவர் பாஜகவில் சேர போகிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன.

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இதையெல்லாம் தவிடுபொடியாக்கிய கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இந்த முறை காங்கிரசை வீழ்த்த அவர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் உறுதியாக கூறினார்கள். இதற்கு ஏற்றார்போலவே பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அமரீந்தர் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நிச்சயம் வெற்றி பெறுவோம்
தலைநகர் டெல்லியில் பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசிய பிறகு அமரீந்தர் சிங் இதனை கூறியுள்ளார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இனிதான் நடைபெறும் என்றும் ஒன்றாக தேர்தலில் போட்டியிடுவோம். நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் கேப்டன் அமரீந்தர் சிங் உற்சாகமாக தெரித்துள்ளார்.

பாஜக உற்சாகம்
அமரீந்தர் சிங்கின் இந்த அறிவிப்பால் பாஜக முகாம் உற்சாகம் அடைந்துள்ளது. கடந்த பஞ்சாப் சட்டமன்ற தேத்தலில் பாஜக, அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டது. ஆனால் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேறியது. தற்போது பாஜக- அமரீந்தர் சிங் கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில் காங்கிரசுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications