கேரளாவில் 'டவ் தே' புயலில் சிக்கி.. நடுக்கடலில் படகு கவிழ்ந்தது.. நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்!
சென்னை: கேரளாவில் டவ் தே புயலில் சிக்கி நாகை மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.
தமிழக, கேரள அரசு மற்றும் மத்திய அரசு மீனவர்களை மீட்டு தர வேண்டும் என்று கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டவ் தே புயல் அதிதீவிரம்
கேரளாவை புரட்டி போட்ட டவ் தே புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இன்று காலை நிலவரப்படி டவ்-தே புயலானது அரபிக் கடலில் கோவாவுக்கு தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும் மும்பைக்கு தெற்கே 490 கி.மீ தொலைவிலும் குஜராத்தின் போர்பந்தர், மகுவாவில் இருந்து 730 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது.

நாகை மீனவர்கள்
இந்த புயலால் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியதாலும், கடல்நீர் உட்புகுந்ததாலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தந்தை இடும்பன்(50), அண்ணன் மணிவேல்(27) உள்பட 10 மீனவர்கள் கொச்சியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

நடுக்கடலில் மாயம்
கடந்த 2-ம் தேதி கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து வந்தனர். டவ் தே புயல் குறித்த எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் உடனடியாக கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி நிலைகுலைந்த படகு கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மற்ற மீனவர்கள் சாமந்தான்பேட்டை கிராமத்துக்கும், எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஒரே கிராமத்தில் சோகம்
கடலில் மாயமான மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து மீனவர்களின் உறவினர்கள், பெண்கள் மீனவர்களை மீட்டுத் தரக்கோரி கதறி அழுவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாயமான மீனவர்க்ளை மீட்டுத் தரக்கோரி தமிழக, கேரள அரசு மற்றும் மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்கள் மாயமானது குறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்தும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மாயமானது சோகத்தை ஏற்படுதித்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications