Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 14வது மெகா தடுப்பூசி முகாம் - தயார் நிலையில் 50 ஆயிரம் மையங்கள்

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாளைய தினம் 14வது தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் சனிக்கிழமையன்று 14வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சுமார் 50 ஆயிரம் மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இந்த முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பணியில் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தொடர்ந்து மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கையாளாப்படுகின்றன. அதில் கொரோனா தடுப்பூசி பெரும்பங்காற்றுகிறது.

பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். தற்போது ஓமிக்ரான் அச்சுறுத்தல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள, நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 14th Mega Vaccine Camp in Tamil Nadu - Arrangement to pay at 50 thousand centers

அந்தவகையில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூடியே போடாமல் இருக்கின்றனர். மேலும் 80 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் 14வது மெகா தடுப்பூசி முகாம் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இந்த முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பணியில் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

கடந்த வாரம் நடைபெற்ற 13வது மெகா தடுப்பூசி முகாமில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதே அளவிற்கு நாளை நடைபெறும் மெகா முகாம்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 மண்டலங்களில் 1,600 இடங்களில் இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+