அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
"நண்பனாக இரு துன்புறுத்துபவனாக இருக்காதே" என்கிற புத்தக வெளியீட்டு விழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் புத்தகத்தை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கல்வி, ஒழுக்கம், ஒற்றுமை, மாணவிகளின் பாதுகாப்பு போன்ற மாணவர்கள் நலன் சார்ந்த நற்பழக்கங்களை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தபட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்றார்.
70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும், நாளை மறுநாள் முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். மேலும், மாணவர்களின் கல்விக்கென தனி தொலைக்காட்சியை விரைவில் முதல்வர் துவங்கி வைப்பார் என்றும், மொபைல் ஆப் மூலம் மின்னனு நூலக சேவை தொடங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். பொறியியல் படிப்பு மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்ததற்கு வேலைவாய்ப்பின்மையே காரணம் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
1 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் . பள்ளி வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் அரைமணி நேரம் விளையாடும் வகையில் திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்துள்ளது. கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸை பயன்படுத்தி, பள்ளி, மாணவ, மாணவியர் வரும் செப்டம்பர் மாதம் வரை அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணாக்கர்களுக்கு ஒழுக்கத்தையும் பழக்கவழக்கங்களையும் மேம்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் . வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்க, மாணவர்கள் விளையாட்டிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக பேசிய அவர், 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை விரிவுபடுத்தப்படும் . மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி. நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான், தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றார். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த, 2 ஆயிரத்து 583 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும் கூறினார்.
-
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications