சென்னையில் ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி.. துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்
சென்னை: சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் கிரிஜா (63) ராதா (55), ராஜ்குமார் (48) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
ஊரப்பாக்கம் பகுதியில் கோதண்டராமன் நகரில் வெங்கட்ராமன் என்பவர் உயிரிழந்து ஓராண்டு கடந்த நிலையில், அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் கிரிஜா, அவரது தங்கை ராதா, உறவினர் ராஜ்குமார் ஆகியோர் 3 பேரும் துபாயில் இருந்து சென்னை வந்துள்ளனர்.

திடீரென வெளிவந்த புகை
இவர்கள் மூவரும் நேற்றிரவு ஒரே அறையில் தூங்கிய நிலையில் அறையில் இருந்து புகையாக வந்துள்ளது. இதனால் பக்கத்து அறையில் தூங்கிய பார்கவி என்பவர் சந்தேகமடைந்து எழுந்து 3 பேரும் தூங்கிய அறையை திறக்க முயன்றுள்ளார். ஆனால் கதவை அப்போது திறக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து
பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்தனர். அப்போது அந்த அறையில் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டு 3 பேரும் தீயில் கருகி இறந்தது தெரிய வந்துள்ளது.

2 பேர் பலத்த காயம்
இதுமட்டுமல்லாமல் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாரதி, குழந்தை ஆராதயா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துயரம்
அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த வெங்கட்ராமனின் வீடு கடந்த ஒரு ஆண்டாக பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனால் ஒரு ஆண்டுக்கு பின் ஃபிரிட்ஜ் உள்ளிட்டவை பயன்படுத்தியதால், எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த உறவினர்கள், ஃபிரிட்ஜ் வெடித்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications