கனமழை நீடிப்பு : செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறப்பு
கனமழை காரணமாக ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருவதால் ஏரிகளில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. மிகப்பெரிய ஏரிகளான செம்பரம்பாக்கம்,புழல் ஏரிகள் நிரம்பத் தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பெய்த சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த பெருமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிக்கவே, திடீரென செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவிலான நீர் திறக்கப்பட்டது. அடையாற்றில் ஏற்கனவே வெள்ளம் சென்ற நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியும் திறக்கப்பட்டதால் சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்தது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து ஏரி நிரம்பியதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. படிப்படியாக அதிகரிக்கப்பட்ட தண்ணீர் திறப்பினால் அடையாறில் வெள்ளம் ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக உபரி நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
கடந்த பல வாரங்களாக ஓய்ந்திருந்த மழை நள்ளிரவு முதல் கொட்டி வருகிறது. அதிகாலை நேரத்தில் மழையின் வேகம் அதிகரித்தது. கடந்த 10 மணி நேரத்தில் சென்னையின் பல பகுதிகளில் 7 செமீ மழை வரை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர்வரத்து 2,162 கன அடியாக உள்ளது. ஏரியில் நீர் இருப்பு 3,132 மில்லியன் கன அடியாக உள்ளது. மொத்த நீர் இருப்பு 24 அடி என்கிற நிலையில் ஏரியின் நீர் மட்டத்தை 22 அடியில் நிலையாக வைக்கப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
விடிய விடிய கொட்டி வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் 23 அடியை எட்டியதால் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பால் புழல் ஏரியில் இருந்தும் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications