75வது சுதந்திர தினம்..போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் வீட்டு முன் பறக்கும் தேசியக்கொடி
சென்னை: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு தேசிய கொடியை வைத்துள்ளார்.
நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 75ஆவது சுதந்திர தின விழா, நடப்பாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இது பவள ஆண்டு என்பதால், கோலாகலமாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் மத்திய அரசு இதனை கொண்டாடி வருகிறது.

வீடுகள் தோறும் மூவர்ணக்கொடி
இதையொட்டி மத்திய அரசு 'ஹர் கார் திரங்கா' எனப்படும் வீடுதோறும் மூவர்ணக்கொடி என்ற இயக்கத்தை அறிவித்தது. இதன்படி ஆகஸ்டு 13ஆம் தேதி முதல் 15ஆம்தேதிவரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தேசியக்கொடி
நாட்டு மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்றும், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முகப்புப் படமாக தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று, தான் வழக்கமாக பேசும் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததார்.

நடிகர் ரஜினிகாந்த்
அதன் அடிப்படையில் பொது மக்களும் விளையாட்டு மற்றும் நடிகர்களும் தேசிய கொடியை முகப்புகளில் வைத்து வருகின்றனர். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுக வலைதளங்களில் முகப்புகளில் தேசிய கொடியை வைக்க வேண்டும்மென மோடியின் வேண்டுகோளின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் முகப்பில் தேசிய கொடியின் புகைப்படத்தை வைத்துள்ளார்.

கொடி ஏற்றிய ரஜினிகாந்த்
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார். நாடு முழுவதும் வீட்டு முன்பாக 13ஆம் தேதி முதல் தேசியக்கொடியை ஏற்றச்சொன்ன நிலையில் இன்றே தேசியக்கொடியை ஏற்றி வைத்து உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.












Click it and Unblock the Notifications