பள்ளிக்கல்வித்துறையில் 98 டிஇ.ஓ, 3 இணை இயக்குநர்கள் அதிரடியாக டிரான்ஸ்ஃபர்.. பின்னணி என்ன?!
சென்னை : தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட புதிதாக உருவாக்கப்பட்ட 152 பணியிடங்களில் பணியாற்றுவதற்காக இந்த பணியிட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்கள் உமா, சசிகலா, அமுதவல்லி ஆகியோரும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
திமுக ஆட்சி அமைந்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல், துறையில் பல்வேறு மாற்றங்களும், அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இடம் மாறுதல்கள் அனைத்தும் கவுன்சிலிங் மூலம் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சீரமைப்பு நடவடிக்கையாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்றவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, ஊழியர்கள் இடமாறுதல் பணிகள் நடந்து வருகின்றன.

அதிரடியாக பணியிட மாற்றம்
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உமா, சசிகலா, அமுதவல்லி ஆகிய 3 இணை இயக்குநர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 இணை இயக்குநர்களும் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.

98 டி.இ.ஓக்கள் மாற்றம்
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் என 152 டி.இ.ஓ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், அவைகளில் பணியாற்றும் வகையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும், புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி
பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் பள்ளிகள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்க தலா1 மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மொத்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் எண்ணிக்கை 120-ல் இருந்து 152 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, புதிதாக 15 வட்டாரக் கல்வி அலுவலர், 16 தனி உதவியாளர், 86 கண்காணிப்பாளர் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட டி.இ.ஓ பணியிடங்களை நிரப்புவதற்காகவே, உடனடியாக ஏற்கனவே டி.இ.ஓக்களாக இருப்பவர்களை இடமாற்றம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications