85 வயதிலும் தள்ளாடியபடியே திமுக கொடி பிடித்த நாராயணப்பா.. ஸ்டாலினுக்காக உயிரையும் கொடுக்க தயாராம்!
சென்னை: 85 வயதிலும் தள்ளாடியபடியே திமுக கொடி பிடித்துக் கொண்டு இன்று சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார் முதியவர் நாராயணப்பா.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், அதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த அதிமுகவை கண்டித்தும் திமுக சார்பில் இன்று தோழமை கட்சிகளுடன் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்டாலின், கனிமொழிவைகோ, ப சிதம்பரம், திருமாவளவன், கீ வீரமணி உள்ளிட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் 85 வயதில் முதியவர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். அவரது பெயர் நாராயணப்பா.

ரயிலில்
இதுகுறித்து அவர் கூறுகையில் நான் ஒசூர் சமத்துவபுரத்திலிருந்து வருகிறேன். எனக்கு 85 வயதாகிறது. நான் பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருக்கிறேன். ஒசூரிலிருந்து சென்னைக்கு காலை ரயிலில் வந்தேன்.
|
ஸ்டாலின்
கருணாநிதிக்காக எனது உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். கருணாநிதி இல்லாவிட்டால் என்ன தளபதி ஸ்டாலின் இருக்கிறாரே. இருவரும் ஒருவர்தான் எனக்கு.

போராட்டங்கள்
ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினருக்கு நீதி கிடைக்கவில்லை என கூறி இந்த போராட்டம் நடைபெறுகிறது. நான் எல்லா போராட்டங்களிலும் கலந்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

நாராயணப்பா
இந்த பெரியவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை வந்த நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக் கொடியை காட்டினார். தள்ளாத வயதிலும் ஒசூரிலிருந்து சென்னைக்கு வந்த நாராயணப்பாவை கட்சியினர் மெய்சிலிர்க்கின்றனர்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications