சென்னை எங்கே போயிடுச்சி பார்த்தீங்களா.. வீட்டிலேயே கஞ்சா செடி வளர்ப்பு.. இளைஞர் கைது
சென்னை: சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் கஞ்சா செடி வளர்த்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையின் கீழ் கஞ்சா புழக்கத்தை ஒழிப்பதற்கான பணிகளில் காவல்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
வீட்டில் ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தவறாக புரிந்து கொண்டாரோ என்னவோ, கஞ்சா செடி வளர்த்து போலீஸ் வலையில் சிக்கியுள்ளார் அந்த இளைஞர்.

கஞ்சா வேட்டை
தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் போலீஸ் இறங்கியுள்ளது. ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரிகளையும், விநியோகம் செய்யும் நபர்களையும் சுற்றி சுற்றி பிடித்து வருகிறது காவல்துறை. அந்த வகையில் தலைநகர் சென்னையில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டு கிலோ கணக்கில் கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து வருவதுடன் அதில் தொடர்புடைய கும்பலை பொறிவைத்து பிடித்து வருகிறது ஸ்பெஷல் டீம்.

கஞ்சா செடி
அண்மையில் கூட சென்னை வேளச்சேரியில் உணவு டெலிவரி செய்வதை போல் வீடுகளுக்கே சென்று கஞ்சாவை விநியோகம் செய்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை தட்டித் தூக்கியது போலீஸ். இந்நிலையில் அந்த நிகழ்வு நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், மற்றொரு அதிர்ச்சிகர நிகழ்வு அதே சென்னையில் நடைபெற்றுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தில் வினோத் என்ற இளைஞர் பூச்செடிகளை வீட்டில் வளர்ப்பது போல் சர்வ சாதாரணமாக கஞ்சா செடியை நட்டு வைத்து வளர்த்து வந்தது கண்டறியப்பட்டது.

கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனை மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுக்கு புத்தியில் இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் அந்த 34 வயது இளைஞர். இதனிடையே கஞ்சா செடி வளர்ப்பில் தொடர்புடைய வேறு சிலர் குறித்தும் வினோத்திடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் சில சமூக விரோதிகள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

போதை வஸ்துகள்
கஞ்சா ஒழிப்பில் அரசும் காவல்துறையும் காட்டும் வேகமும், அக்கறையும் பொதுமக்கள் மத்தியில் ஓரளவு கவனம் ஈர்த்திருப்பதுடன் அவர்களின் பாராட்டையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. கஞ்சா மட்டுமின்றி அரசினால் தடை செய்யப்பட்டுள்ள போதை வஸ்துகள் அனைத்தையும் முற்றிலும் புழக்கத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications