ஜூலை 12ஆம் தேதி.. மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.. விரைவில் நல்ல செய்தி?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜூலை 12ஆம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ரஜினி
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு மயோ மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் ரசிகர்களுடன் ரஜினி எடுத்த புகைப்படங்களும் ட்விட்டரில் வைரலானது.

ரசிகர்களுடன் மீட்டிங்
மருத்துவ பரிசோதனைகள் முடிந்த நிலையில், நேற்று அதிகாலை ரஜினி, அமெரிக்காவில் இருந்து சென்னைக்குத் திரும்பினார். இந்நிலையில், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜூலை 12ஆம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராகவேந்திரா திருமண மண்டபம்
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, உடல்நிலை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

ஃபர்ஸ்ட் லுக்
அதைத் தொடர்ந்து அவரது நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் சேர்ந்தனர். இந்தச் சூழலில்தான், மக்கள் மன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசுகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போர்ஸ்டர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications