ஆக்சிடெண்ட் பண்ணி விட்டு எஸ்கேப்.. பிக்பாஸ் பிரபலத்தின் கணவரை தேடும் காவல்துறை.. சென்னையில் பரபர..!
சென்னை : திரைப்பட நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான நடிகை ஆர்த்தியின் கணவரும் நடிகருமான கணேஷ்கர் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்ட நிலையில் அவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் திரை உலகில் ஏராளமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை ஆர்த்தி.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சிகளிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் இன்னும் பிரபலம் ஆனார்.

நடிகை ஆர்த்தி
நடிகர் வடிவேலுவுடன் அவர் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் பலரது பேவரிட்டாக உள்ளது. அவரது கணவரான கணேஷ்கரும் சிறுவயதில் இருந்தே தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் நடித்த படிக்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தார்.

நடிகர் கணேஷ்கர்
தற்போது சில படங்களில் நடித்து வரும் கணேஷ்கர் சாலை தடுப்பில் தனது காரை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவானதாக அவரை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் கணேஷ்கர் நேற்று பட்டினப்பாக்கம் மெரினா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.

கார் விபத்து
சாலை தடுப்பில் வேகமாக கார் மோதிய நிலையில் கார் சேதமடைந்தது. அப்போது அவரது காரின் பின்னால் வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து கணேஷ்கர் தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனது கணவரை காணவில்லை என நடிகை ஆர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை
குடிபோதையில் இருந்த போது கணேஷ்கர் விபத்தை ஏற்படுத்தினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது கணவரை காணவில்லை என நடிகை ஆர்த்தி அளித்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications