அல்லாஹ்வுக்கு நன்றி..! ரம்ஜான் நாளில் உருக்கமான பதிவிட்ட குஷ்பூ! ஓ இதுதான் அதுக்கு காரணமா?
சென்னை : ரமலான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று தனக்கு மிக முக்கியமான நாள் என்றும், அல்லாஹ்வுக்கு நன்றி என நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ சுந்தர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு சுந்தர்.சி.யின் இயற்பெயர் நகாத் கான் என்பது பலருக்கு இன்னும் தெரியாது. 1980ல் சினிமா துறைக்குள் நுழைந்த அவர், தென்னிந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல் முதல் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நாயகியாக கிட்டத்தட்ட 20 வருடங்கள் சினிமா துறையில் குஷ்பு மிக முக்கியமான நடிகையாக கோலோச்சிய அவர், நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். அப்போது சினிமாவுக்கு முழுக்கு போடாமல் தொடர்ந்து நடித்து வந்தார்.
நல்ல சந்தர்ப்பம்..! சமூகத்தில் ஒற்றுமை சகோதரத்துவம் மேம்படுத்தட்டும்..! பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து.

குஷ்பூ சுந்தர்
பல படங்களில் நாயகியாக நடித்து வந்த அவர், பின்னர் அக்கா உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து திரையுலகில் மீண்டும் ஒரு வலம் வந்தார். மிகவும் பிசியான நடிகையாக இருந்த போதே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தனியார் தொலைக்காட்சியில் அவர் வழங்கிய கேக் ஷோ அப்போதே பலத்த வரவேற்பை பெற்றது.

அரசியல் பிரவேசம்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் இவர் நடித்த இவரது திறமை காரணமாக தென்னிந்திய திரை உலகில் முக்கியமான நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் பிரபலமாக இருந்த குஷ்பூ, பெரியார் மீது இருந்த பற்றால் 2010ல் திமுகவில் இணைந்தார்.அவர் 2014ல் திமுகவை விட்டு வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார்.

பாஜக தேசிய செயற்குழு
அதன்பின் காங்கிரசில் இருந்து விலகி 2020ல் பாஜகவில் சேர்ந்தார். தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் குஷ்பு சுந்தர் ஹிஜாப் விவகாரத்தின் போது மிகத் தீவிரமான கருத்துகளை முன்வைத்தார். இந்நிலையில் தற்போது தீவிர பாஜக விசுவாசியாக இருக்கும் அவர், இன்று தனக்கு மிக முக்கியமான நாள் என்றும், அல்லாஹ்வுக்கு நன்றி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அல்லாஹ்வுக்கு நன்றி
அதற்கு என்ன காரணம் என்றால் இன்று அவரது அம்மாவுக்கு பிறந்தநாள். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்," அம்மா!! உண்மையாகவே கடவுள் தான் அனுப்பினார். எல்லாம் மாற்றத்தக்கது ஆனால் ஒரு தாய் மாற்ற முடியாது. நான் சந்தித்ததில் மிக அழகான பெண் என் "அம்மி". இன்று அவர் தனது 78வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, அன்பு, இரக்கம், பச்சாதாபம், மனிதாபிமானம் மற்றும் கருணை ஆகியவற்றின் தூதரை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மி!" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications