நடிகை சினேகாவிடம் ரூ.26 லட்சத்தை பெற்று திருப்பி தராமல் மிரட்டும் தனியார் நிறுவனம்: போலீஸில் புகார்
தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் சில பர்சண்டேஜ் லாபம் மாதா மாதம் தருவதாக பணம் பெற்று பங்கும் தராமல் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுவதாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடிகை சினேகாபிரசன்னா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

முன்னணி நடிகை சினேகா
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ்பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த காலத்தில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப் , பம்மல் கே சம்மந்தம், ஜனா, புதுப்பேட்டை, ஆனந்தம் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

பிரசன்னாவுடன் காதல் திருமணம்
2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.

ஏமாற்றப்பட்ட சினேகா
இந்நிலையில் நடிகை சினேகா கமிஷனர் அலுவலகத்தில் ஆன் லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனியார் சிமெண்ட் மற்றும் மினரல்ஸ் நிறுவனம் ஒன்றின் பங்குதாரர்களான தம்பதி மற்றும் மற்றொரு பங்குதாரர் 3 பேர் தன்னிடம், தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காக கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் தருவதாக ஆசைக்காட்டியதன் பேரில் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1 லட்சமும் கொடுத்ததாகவும் இதற்காக மாசம் ரூ.1.80 லட்சம் லாபம் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் ஐந்து மாதம் ஆகியும் பங்கு தொகையும் தராமல், அசல் தொகையும் தராமல் இருப்பதாகவும் இதுகுறித்து கேட்டபோது பணம் தர முடியாது என அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின்பேரில் விசாரிக்கும் போலீஸார்
ரூ.1 லட்சத்தை நேரில் அண்ணா என்கிளேவ், ஈஞ்சம்பாக்கம் என்கிற முகவரியில் நேரில் கொடுத்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு பங்கு தொகை பற்றி கேட்கும்போது தராமல், தன்னை மிரட்டுவதாக சினேகா கடந்த சில மாதங்களுக்கு முன் ஆன்லைனில் மேலதிகாரிகளிடம் அளித்த புகார் தற்போது கானத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்க உள்ளனர். புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் தொகை அதிக அளவு உள்ளதால் சிசிபி போலீஸுக்கு மாற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத்தொடரப்படும் எனத் தெரிகிறது.

இப்படியும் ஏமாறலாமா? வழிகாட்டும் போலீஸார்
ஒன்றும் அறியாத மக்கள் தங்கள் வாழ்க்கை சேமிப்பை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதிநிறுவனங்கள், தனியார்களிடம் முதலீடு செய்து மொத்தப்பணத்தையும் இழந்துவிட்டு எங்களிடம் வந்து நிற்கின்றனர். கோடிக்கணக்கில் வசூலித்து ஏமாற்றியவன் பெரிய வக்கீல்களை வைத்து வழக்காடுகிறான். அவர்கள் அறியாத மக்கள், ஆனால் பிரபலமானவர்கள், சமூகத்தில் நல்லது கெட்டது தெரிந்தவர்களும் இப்படி பணத்தை பறிகொடுத்தால் என்ன செய்வது. குறைந்தப்பட்சம் யாரிடமாவது லீகல் ஒபீனியன் கேட்டாலே அதில் உள்ள சிக்கலையும், நிறுவனத்தில் எப்படி முதலீடு செய்வது என்பதையும் எளிதாக டாக்குமெண்ட் போட்டு கொடுத்துவிடுவார்கள் என்கின்றனர் இதுபோன்ற வழக்குகளை விசாரித்து அனுபவம் பெற்ற காவல்துறையினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications