ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை... கூட்டணிக் கட்சிகளை மிரள வைத்த அதிமுக..!
சென்னை: ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது அதிமுக தலைமை.
அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை சாதகமாக கொண்டு ஆட்சியில் பங்கு கோரும் திட்டத்துடன் இருந்து வந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாற்று வழிகளை தேட ஆரம்பித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றியோ தோல்வியோ அது எதையும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கூட்டணிக் கணக்கு
வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சி அமைப்பது என்ற திட்டத்தில் இருக்கிறது அதன் கூட்டணிக் கட்சிகள். ஆனால் அப்படியொரு கனவில் இருந்தால் அதனை இப்போதே கலைத்து விடுங்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்திவிட்டது அதிமுக தலைமை. கூட்டணி ஆட்சி என்பதை பகிரங்கமாக கூறுவதற்கு பதில் தேமுதிக மூன்றாவது அணி என குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

பேச்சுக்கே இடமில்லை
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணி, தனித்துப் போட்டி என எந்த முடிவெடுத்தாலும் அதனைப் பற்றி கவலைப்படும் எண்ணத்தில் இல்லை இ.பி.எஸ். இதில், பாமகவை மட்டும் தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என சற்றே விரும்புகிறார் இ.பி.எஸ். ஆனால் அதற்காக பாமகவின் கோரிக்கையான துணை முதல்வர் கோரிக்கையையும் ஏற்க மனமில்லை அவருக்கு.

வழியில்லை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பின்னணியில் இருப்பது திமுக. ஆச்சரியமாக இருக்கிறதா, ஆம், திமுகவில் ஏறத்தாழ திரைமறைவு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சீட் பங்கீடு வரை எழுபது சதவீதம் முடிந்துவிட்டது. இந்த சூழலில் அங்கு புதிய கட்சிகளுக்கு கதவு திறக்கப்படாது என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.

பாஜக -அதிமுக
பாஜக மேலிடத்தை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், கன்டிஷன்கள் இல்லாமல் அதிமுக கூட்டணியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமகவும் தற்போதைய நிலவரப்படி அதிமுக கூட்டணியில் நீடிக்கவே மிக அதிக வாய்ப்புகள் உள்ளன. தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பிடிக்கப் போகிறது என்பது தான் வழக்கம்போல் இந்த முறையும் மர்மமாகவே இருக்கிறது.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
"கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.." திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்!












Click it and Unblock the Notifications