4 அதிமுக விக்கெட் காலி.. இபிஎஸ்ஸுக்கு தலைவலி.. தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர்கள்.. விஜய் தந்த செக்மேட்
சென்னை: 4 அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர்.. ஏற்கனவே 4 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஜம்ப் ஆன நிலையில், இன்று மேலும் 4 முக்கிய அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை தந்துள்ளது.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்தன் முன்னிலையில், கடம்பூர் ராஜூ, எம்சி சம்பத், உடுமலை ராதாகிருஷணன், எம்எஸ்எம் ஆனந்தன் மற்றும் முக்கிய எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு நீங்கலாக 107 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாத சூழலில், கூட்டணி கணக்குகளை அடியோடு மாற்றி அமைத்தது.

தவெக தலைவர் ஜோசப் விஜய் விடுத்த ஆதரவு கரத்தை ஏற்று, திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய காங்கிரஸ், 2 அமைச்சர் பதவிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியோடு தவெக அரசில் கைகோர்த்தது.
இதனைத் தொடர்ந்து விசிக மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளும் தலா ஒரு அமைச்சர் பதவியைப் பெற்று ஆட்சியில் பங்கு வகிக்க, இடதுசாரிகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகின்றனர். இப்படிப் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமைந்த தவெக அரசு, தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்கப் பல்வேறு அரசியல் வியூகங்களைக் கையாண்ட விதம் தமிழகத்தையே உற்று நோக்க வைத்தது.
அமமுக எம்எல்ஏ காமராஜ்
ஆரம்பத்தில், அமமுக எம்எல்ஏ காமராஜ் கடத்தப்பட்டதாகவும், அவரிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி பேட்டி அளித்தபோது அரசியல் களம் பயங்கரமாக சூடானது. ஆனால், அதற்குள் முதலமைச்சர் விஜய், அதிமுகவில் தனிப் பிரிவாக செயல்பட்டு வந்த எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணியைச் சந்தித்துப் பேசினார்.
இதன் எதிரொலியாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், வேலுமணி மற்றும் சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்களும், அமமுகவின் காமராஜும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அவையைக் அதிரவைத்தனர். அதன் தொடர்ச்சியாக, அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு அதிகாரப்பூர்வமாகத் தவெகவில் இணைந்தனர்.
வேலுமணி அதிமுக
இந்த அடுத்தடுத்த அதிரடிகளால் நிலைகுலைந்து போன அதிமுக வட்டாரத்தில், இப்போது மீண்டும் ஒரு புதிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவளித்த எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில எம்எல்ஏக்கள்., திடீரென மீண்டும் தங்களது பழைய தலைவரான எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கே திரும்பிச் சென்று ஐக்கியமாகியுள்ளனர். இந்தத் திடீர் பல்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்த அதிருப்தி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் சிலர் மட்டும் இன்னும் தாய் கழகத்துக்கு திரும்பவில்லை. இவர்கள் 2 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையப் போகிறார்கள் என்ற பேச்சுக்கள் பரவலாக எழுந்த போதிலும், இப்போது அவர்கள் இருவரும் தங்களது சொந்த தொகுதிகளுக்குச் சென்று அங்கேயே முகாமிட்டு அமைதி காத்து வருகின்றனர்.
இப்படி அதிமுகவுக்குள் நடக்கும் உட்கட்சிப் பூசல்களும், அணி மாற்றங்களும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தவெகவின் "ஆபரேஷன்" மிகத் தீவிரமாகத் தொடர்வது தற்போதைய நிலவரங்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
4 முன்னாள் அமைச்சர்கள்
சமீபத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்தது எடப்பாடி தரப்புக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்னும் சில மிக முக்கிய, பரிச்சயமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாகத் தவெகவில் இணையப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்தன.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத் மற்றும் கடம்பூர் ராஜூ , உடுமலை ராதாகிருஷ்ணன், எம்எஸ்எம் ஆனந்தன் என 4 பேருமே நேரடியாக பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சரியாக 10 மணிக்கு வருகை தந்தனர்.. இவர்கள் காரை விட்டு இறங்கியதும் அங்கிருந்த தவெக நிர்வாகிகள் கொடுத்த வரவேற்பு, அடுத்தடுத்து நடக்கப்போகும் அதிரடிக்கு சாட்சியாக அமைந்தது.
எம்சி சம்பத், கடம்பூர் ராஜூ
சிவகங்கை அதிமுக நிர்வாகி பொன்மணி பாஸ்கரன், ராமநாதபுரம் அமமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என். முருகன் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்தனர்.. இவர்கள் அனைவரும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர்.. அதுமட்டுமல்லாமல், எம்.சி.சம்பத் தலைமையில் மட்டுமே சுமார் 500 பேர் தவெக கட்சியில் இணைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் ஒருபக்கம் என்றால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, சங்ககிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜ், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ராஜமுத்து மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் போன்ற டாப் லெவல் முக்கிய புள்ளிகள் அனைவரும் தவெகவில் இணைத்து கொண்டுள்ளனர்.
-
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications