ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த மாண்டஸ்.. இப்போ எங்க இருக்கு? எந்த மாவட்டங்களுக்கு மழை?
சென்னை: வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை சென்னையையொட்டி கரையை கடந்த நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட உள் மாவட்டங்களை வழியாக அரபிக் கடலுக்கு நகர்ந்துகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 6-7 தேதிகளில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்தது.
இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்ட நிலையில் இது 9ம் தேதி நள்ளிரவு தொடங்கி 10ம் தேதி அதிகாலையில் தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டது.

புயல்
பின்னர் மாமல்லபுரத்திற்கும், பழவேற்காடுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இதனையடுத்து நேரம் செல்ல செல்ல சென்னைக்கு அருகே புயல் கரையை கடக்கும் என்று துல்லியமாக கணிக்கப்பட்டது. இதனையடுத்து சேதங்களை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. வானிலை ஆய்வு மையம் கணித்ததைப் போலவே இரவு முதல் பலத்த காற்று வீசத் தொடங்கியது. இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. அதேபோல மக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. தயார் நிலையில் இருந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தினர்.
நகர்வு
இதனையடுத்து, நள்ளிரவில் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் தொடங்கியது. புயலின் கண் பகுதி கரையை கடந்த போது காற்று அதிகமாக வீசவில்லையென்றாலும், அதனுடைய வால் பகுதி கடக்கும்போது காற்றின் வேகம் அதிகரித்தது. குறிப்பாக நுங்கம்பாக்கத்தில் 70 கி.மீ வேகத்தில் காற்று விட்டு விட்டு அடித்தது. அதேபோல மீனம்பாக்கத்தில் 60 கி.மீ வேகத்திலும், திருத்தணியில் 56 கி.மீ வேகத்திலும் காற்று விட்டு விட்டு அடித்தது. எண்ணூரை பொறுத்த அளவில் 56 கி.மீ என்கிற அளவில் நிலையான வேகத்தில் காற்று அடிக்கத்தொடங்கியது. புயல் முழுமையாக கரைய கடக்க அதிகாலை 4 மணி வரை எடுத்துக்கொண்டது. இதனையடுத்து காலை 7 மணி நிலவரப்படி புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரக்கோணத்திற்கு அருகில் நிலைகொண்டிருக்கிறது. மேலும், இது சீரான வேகத்தில் மேற்கு திசை நோக்கி அரபிக் கடலுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications