அண்ணன் வாழப்பாடியார் வாழ்க! ஆர்ப்பாட்டத்தில் துதியை மாற்றி பாடிய முன்னாள் எம்எல்ஏ! கடுப்பான எடப்பாடி
சென்னை : சென்னையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அண்ணன் எடப்பாடியார் வாழ்க! என்பதற்கு பதிலாக அண்ணன் வாழப்பாடியார் வாழ்க! என முன்னாள் எம்எல்ஏ ஒருவர் முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
மேலும் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக ஆர்ப்பாட்டம்
முதல் கட்டமாக சென்னை, ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் உள்ள மாவட்டங்களை தவிர சுமார் 50 அதிமுக அமைப்பு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் கட்டமாக நேற்று கன்னியாகுமரி தஞ்சாவூர் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3ஆம் கட்ட ஆர்ப்பாட்டம்
இன்று சென்னையில் உள்ள மொத்தம் பத்து அமைப்பு மாவட்டங்களையும் சேர்த்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட கழகங்கள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகமே அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்களான தங்கமணி திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தலைமை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வாழப்பாடியார் வாழ்க
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலைக்கு வந்து பின்னர் மேடை ஏறினார் அப்போது அவரை வரவேற்று உற்சாகமாக தொண்டர்கள் முழக்கமிட்டனர். அப்போது மேடையில் நின்ற முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஒருவர் அண்ணன் எடப்பாடியார் வாழ்க என அழைப்பதற்கு பதிலாக உணர்ச்சிவசப்பட்டு அண்ணன் வாழப்பாடியார் வாழ்க அண்ணன் வாழப்பாடியார் வாழ்க என இரண்டு முறை ஆவேசமாக முழங்கினார்.

சலசலப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி மூத்த நிர்வாகிகளை முறைத்த நிலையில் சக நிர்வாகிகள் அந்த எம்எல்ஏ வை கண்டித்தனர். இதையடுத்து அவர் அண்ணன் எடப்பாடி வாழ்க என கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்த நிலையில் திடீரென லேசாக மயக்கம் அடைந்தார் இதை அடுத்து அதிமுக நிர்வாகிகள் தண்ணீரை கொடுத்து அவரை அமர வைத்தனர்.












Click it and Unblock the Notifications