சென்னையின் இந்த 5 மண்டலங்களில்.. காற்றுத்தர குறியீடு மிக மோசம்.. ஷாக் கொடுக்கும் புள்ளி விவரம்!
சென்னை: தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
Recommended Video
இதனால் சென்னை முழு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன்காரணமாக சென்னையில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் காற்று மாசுபாடு 55 முதல் 75 குறியீடு என்ற அளவிலேயே இருந்த நிலையில் பட்டாசு வெடித்ததால் 150 என உயர்ந்துள்ளது.

இந்த் நிலையில் சென்னையின் ஐந்து மண்டலங்களிலும் காற்றுத் தர குறியீடு மிக மோசமான நிலையில் இருக்கிறது என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை:
பெசன்ட் நகரில் தீபாவளிக்கு முன்பு (26.11.2021) காற்றுத் தரக் குறியீடு 41ஆக இருந்தது. ஆனால், தீபாவளி தினத்தன்று இது 342 ஆக உயர்ந்தது. தியாகராய நகரில் காற்றுத் தர குறியீடு 56-ல் இருந்து 385 ஆக உயர்ந்திருக்கிறது. நுங்கம்பாக்கத்தில் 51ல-ல் இருந்து 369 ஆக அதிகரித்துள்ளது. திருவல்லிக்கேணியில் 52-ல் இருந்து 368 ஆக அதிகரித்துள்ளது. சௌகார்பேட்டையில் 60-ல் இருந்து 371 ஆக குறியீடுகள் உயர்ந்துள்ளன.
இந்த ஆண்டில் மிதக்கும் நுண்துகள்களின் அளவுதான் வெகுவாக அதிகரித்துள்ளது. காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடின் அளவில் பெரிய மாறுபாடு ஏதுமில்லை.இ.ந்த ஆண்டு சென்னையில் காற்றின் தரம் மிக மோசமாக இருந்ததற்கு காற்றின் வேகம் குறைவாக இருந்ததும் அதிக ஈரப்பதம் இருந்ததுமே காரணம். இதன் காரணமாகத்தான் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்ட புகையும் நுண்துகள்களும் விரைவில் படியாமல் வெகு நேரம் காற்றில் மிதந்ததன என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications