கொரோனா வைரஸை நுழைய விடாமல் செய்த சின்னஞ்சிறு ஆந்திர கிராமம்.. ஒரு தொற்றுகூட இதுவரை இல்லையாம்..!
துக்கிரிலப்பாடு என்ற கிராமத்தில் தொற்று ஒன்றுகூட இல்லையாம்
சென்னை: உலகமே கொரோனாவை பார்த்து நடுங்கி கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ஆந்திராவில் ஒரே ஒரு கிராமம் மட்டும் எந்தவித கவலையுமின்றி கூலாக இருக்கிறது... காரணம், சுயக்கட்டுப்பாடு மற்றும் கூட்டு முயற்சியின் மூலம் கொரோனாவை இவர்கள் அண்ட விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பீதி கவ்வி உள்ளது.. என்ன மாதிரியான வைரஸ், இதற்கான இறுதியான அறிகுறிகள் என்ன? இதற்கு என்ன மருந்துகள் என்ன என்பது குறித்தெல்லாம் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்போதைக்கு தடுப்பூசி மட்டும் நமக்கு கையில் உள்ள ஒரே நம்பிக்கை.
இந்நிலையில், எந்த மாதிரியான வைரஸ் வந்தாலும், தங்களை எதுவுமே செய்ய முடியாது என்று தைரியமாக சொல்லுகிறார்கள் ஒரு கிராமத்தினர்.. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் துக்கிரிலப்பாடு என்ற சிறிய கிராமம் உள்ளது.. இவர்கள்தான் உலகத்துக்கே ஆச்சரியத்தை தந்து வருகிறார்கள்.

கொரோனாவைரஸ்
இந்த கிராம மக்கள் அடிக்கடி வெளியே செல்வதும் இல்லையாம், வெளியாட்களை தங்கள் கிராமத்திற்குள் நுழையவிடுவதும் இல்லையாம்.. மிக மிக அவசியமான காரியம் என்றால் மட்டுமே வெளியே செல்கிறார்கள்.. அதுவும், மாஸ்க் அணிந்துகொண்டு, கையில் சானிடைசரையும் எடுத்துக் கொண்டுதான் வெளியே கிளம்புவார்களாம்.

கூட்டம்
காரணம், பொருட்களை வாங்க இந்த கிராமத்தில் மொத்தமே 8 கடைகள்தான் இருக்கிறதாம்.. மேலும், ஒரு கடையில் குறிப்பிட்ட நாளில் ஒரு வார்டு மக்கள் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும் என்று ரூல்ஸ் போடப்பட்டுள்ளதாம்.. தேவையில்லாமல் கடைகளில் கூட்டம் சேருவதை தவிர்க்கவே இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ளனர்.

கிராமம்
தொற்று வேகமாக பரவி வருகிறது என்று தெரிந்தவுடனேயே, கிராமத்தில் வழக்கமாக நடக்கும் கோயில் விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தவிர்த்துள்ளனர்.. இதை கிராம மக்களே ஒன்றுகூடி எடுத்த முடிவு.. அதனால், பக்கத்து கிராமத்தில் வேறு யாருக்காவது விசேஷம் என்றால்கூட இவர்கள், அங்கு செல்வதில்லையாம்..

பாதுகாப்பு
வாரத்துக்கு 2 முறை, கிராமம் முழுவதும் கிருமிநாசினி அடிக்கப்படுகிறது.. சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலும் தெளிக்கப்படுகிறது.. கிராமத்தில் உள்ள கால்வாய்கள், வடிகால்கள் 2 நாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன.. இதையெல்லாம் முறைப்படி செய்துவருவதால்தான் தங்கள் கிராமத்தில் தொற்று நுழையவில்லை என்றும், அதனாலேயே தாங்கள் முழு பாதுகாப்புடன் இருக்கிறோம் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications