Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை எதுவும் தெரியாமல் பேசுகிறார்..தேயிலை பற்றி என்ன தெரியும்.. வனத்துறை அமைச்சர் ‘நறுக்’கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டேன்டீ விவகாரத்தில் ஒருவருக்கு கூட வேலையிழப்பு ஏற்படாத நிலை ஏற்படுத்தப்படும் என்றும் அண்ணாமலை தேயிலை பற்றி எதுவும் தெரியாமல் மேடையில் பேசி வருகிறார் என்றும் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

நீலகிரி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டங்கள் (டேன்டீ) உள்ளன.

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இந்த தோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். டேன் டீ நிறுவனத்துக்கு சொந்தமான இந்த நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

அண்ணாமலை எதிர்ப்பு

அண்ணாமலை எதிர்ப்பு

குறிப்பாக தமிழக பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து தமிழக அரசின் முடிவை கடுமையாக விமர்சித்தது. இது தொடர்பாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பட்டமும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்று தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அண்ணாமலை பேசுகையில், "1823 ஆம் ஆண்டு இலங்கைக்கு தமிழர்களை பிரிட்டிஷார் அழைத்து சென்றனர். இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு இவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

 5 லட்சம் தமிழர்கள்

5 லட்சம் தமிழர்கள்

இதையடுத்து, 1963 ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி- சிறிமாவோ பண்டாரநாயகா இடையே ஒப்பந்தம் போடப்பட்டு சுமார் 5 லட்சம் தமிழர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் குறைந்த சம்பளத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த நிறுவனத்தை மூட 5,315 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

நாங்கள் நடத்திக் கொள்கிறோம்

நாங்கள் நடத்திக் கொள்கிறோம்

தற்போது குடியிருப்புகளை விட்டு வெளியேற தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். தாயகம் திரும்பிய தமிழர்களை 2- ஆம் தர குடிமக்களாக திராவிட மாடால் அரசு நடத்துகிறது. டேன்டீ நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் ஒப்படைத்து விடுங்கள். நாங்கள் நடத்திக் கொள்கிறோம்.

அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கலாம்

அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கலாம்

டேன்டீயில் 211 கோடி ரூபாய் கடன், மின்சார வாரியத்தில் 1 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் எல்லாம் நஷ்டம் அடைய அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் காரணம் கிடையாது. தனியார் தோட்டங்கள் லாபகரமாக செயல்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களில் டேன்டீ தூளை விற்பனை செய்தால் 1000 கோடி வருமானம் ஈட்ட முடியும். இதன் மூலம் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கலாம். கூடலூர் பகுதியில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், மனித - வன விலங்குகள் மோதல்கள் நடைபெறுகின்றன. இதற்கு உரிய தீர்வு காணப்படவில்லை" என்று பேசியிருந்தார்.

தேயிலை பற்றி எதுவும் தெரியாமல்..

தேயிலை பற்றி எதுவும் தெரியாமல்..

இந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வனத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் பேசியுள்ளார். குன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "அண்ணாமலை தேயிலை பற்றி எதுவும் தெரியாமல் மேடையில் பேசி வருகிறார். டேன் டீ வரும் காலத்தில் நஷ்டம் ஏற்படாதவாறு செயல்படுத்தப்பட இருக்கிறது.

வேலையிழப்பு ஏற்படாத நிலை

வேலையிழப்பு ஏற்படாத நிலை

இதற்காக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டேன்டீ விவகாரத்தில் ஒருவருக்கு கூட வேலையிழப்பு ஏற்படாத நிலை ஏற்படுத்தப்படும். தேவாலா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM2 யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. யானையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+