அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து புதிய திருப்பத்தைக் கண்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகப் பணியாற்றி, தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்துள்ளார்.
"நாம் தலைவர்கள்" (We the Leader) என்ற புதிய சமூக - அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாக அவர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இந்தத் திடீர் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து இதற்குப் பிரம்மாண்ட ஆதரவு குவியத் தொடங்கியுள்ளது.

8 லட்சம் இணைந்த சாதனை
பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுத்த ராஜினாமாவை அக்கட்சியின் தேசியத் தலைமை முறைப்படி ஏற்றுக் கொண்ட சில நிமிடங்களிலேயே, அவர் தனது புதிய இயக்கத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்.
வாரிசு அரசியல் மற்றும் தனிநபர் வழிபாட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த புதிய இயக்கத்தில் இணையுமாறு அவர் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அண்ணாமலை இயக்கத்தை அறிவித்து மக்களை இணைய அழைப்பு விடுத்த அடுத்த மூன்றரை மணி நேரத்திற்குள்ளாகவே, இந்த புதிய 'லீடர்' இயக்கத்தில் சுமார் 5.63 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் இளைஞர்கள் ஆன்லைன் மூலமாகத் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தமிழக வரலாற்றில் ஒரு புதிய இயக்கத்திற்கு இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, நிமிடத்திற்குச் சராசரியாக 35 பேர் என்ற வேகத்தில் மக்கள் தொடர்ந்து தங்களை இந்த புதிய இயக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
7.30 மணியளவில் சுமார் 8,06,986 பேர் இணைந்துள்ளனர்.

கோவையில் அமையும் புதிய தலைமையகம்
அண்ணாமலையின் இந்த புதிய இயக்கம் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நெறிமுறைகள் மற்றும் அரசியலுக்கான மையம் (APJ Abdul Kalam Centre for Ethics and Politics) இந்த புதிய இயக்கத்தின் ஒரு அங்கமாக இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் (Technocrats) மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் எனப் பலதரப்பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் பண்பாட்டைத் தமிழ்நாட்டில் உருவாக்கவே இத்தகைய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த மையத்தில் முறையாக பயிற்சி வழங்கப்படும் என்றும், இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் புதிய கட்சிகள் அசுர வளர்ச்சி பெற்று வரும் வேளையில், அண்ணாமலையின் இந்த புதிய இயக்கத்தின் வருகை மற்றும் அதற்குத் தற்போது கிடைத்துள்ள இந்த 5 லட்சம் மக்களின் ஆதரவு, வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை பேட்டி.. டிசம்பர் 2025-லேயே விலக முடிவு செஞ்சேங்க.. அப்போ அமித் ஷா சொன்னது என்ன தெரியுமா? -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications