சென்னையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. எமனாக மாறிய ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்
சென்னை: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணன்குமார். 30 வயதான இவர், பாதுகாப்புப் பணியில் இருக்கும் பொழுதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த இவர், ஆவடி பூம்பொழில் நகரில் நேரு தெருவில் தங்கிக் காவல் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்பவருடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனதாகக் கூறப்படுகிறது.

சென்னை அம்பத்தூரில் மத்திய அரசின் தொலைத் தொடர்பு சிறப்பு நிறுவனம் ஒன்றில் தொலைத்தொடர்பு இணையங்களைக் கண்காணிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அந்த வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஆயுதப்படை காவலரான சரவணகுமார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது பணியில் இருக்கும் போதே, யாரும் எதிர்பார்க்காத வகையில் சரவணக்குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனூப்பி உள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மகேஷ், உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் அதிகமாகப் பணத்தை இழந்ததாலேயே ஆயுதப்படை காவலர், தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு












Click it and Unblock the Notifications