Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார்னிங்கே தரவில்லை.. 17 ரவுண்டு ஒரே ஆளாக சுட்டுத் தள்ளிய சுடலை கண்ணு! பகீர் அருணா ஜெகதீசன் அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு தனி ஆளாக அபாயகரமான துப்பாக்கியை கொண்டு மொத்தம் 17 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த மே மாதம் 18ந் தேதி தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு! 17 போலீசார் மீது நடவடிக்கை தேவை.. அருணா ஜெகதீசன் அதிரடி அறிக்கை

அருணா ஜெகதீசன் அறிக்கை

அருணா ஜெகதீசன் அறிக்கை

இந்த அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அறிக்கை குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்க பயன்படுத்தும் Public Addressing System (அ) நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை.

 ஒருங்கிணைப்பு இல்லை

ஒருங்கிணைப்பு இல்லை

துப்பாக்கி சூடு நடத்திய போது கூட காவல் உயர் அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய கன் மேன்கள் எனப்படும் ஷூட்டர்களுக்கு கொடுத்த கட்டளை மற்ற அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை வழியாக குண்டு துளைத்து முன் வழியாக உள்ளுறுப்புகளை சிதைத்து குண்டு வெளியே வந்திருக்கிறது.

 ஓடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

ஓடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

சிலருக்கு முதுகின் பின் பகுதியிலும் குண்டு துளைத்து இதயம் போன்ற முக்கிய பகுதியை சிதைத்து மார்பின் முன்பகுதி வழியாக வெளியேறியதும் ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுகிறது. மேலும் இடுப்புக்கு கீழே யாரையும் சுடவில்லை.

கடமை தவறிய ஆட்சியர்

கடமை தவறிய ஆட்சியர்

அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கடமையிலிருந்து தவறியதும், அவரது அலட்சியமான நடவடிக்கையே போராட்டம், துப்பாக்கிச்சூட்டில் முடிய அடித்தளமாக இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+