முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல்.. சென்னையில் கடுமையாகும் லாக்டவுன் விதிகள்.. ககன்தீப் சிங் உத்தரவு
சென்னை: சென்னையில் லாக்டவுன் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே 10ம் தேதியில் இருந்து லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முழு லாக்டவுன் போடப்பட்டாலும் கூட மக்கள் தொடர்ந்து வெளியே செல்வதும், தேவையின்றி சுற்றுவதும் அதிகமாகி வருகிறது.
சென்னையில் லாக்டவுன் போடப்பட்டதற்கான அறிகுறியே சில பகுதிகளில் தெரியவில்லை. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை செய்தார்.

விதிகள்
லாக்டவுன் தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று ஸ்டாலின் இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் குறிப்பிட்டார். அதோடு விதிகளை தீவிரமாக்க ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விதிகளை கண்டிப்பாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வருக்கு ஆலோசனை வழங்கின.

கூடுதல் விதி
இந்த நிலையில் முதல்வரே லாக்டவுன் குறித்து வருத்தப்பட்டதை அடுத்து தற்போது சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் லாக்டவுன் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தொடர்பாக காவல் ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் இன்று ஆலோசனை செய்தனர்.

ஆலோசனை
இந்த ஆலோசனையின் முடிவில் லாக்டவுன் விதிகளை மீறுவோரை கண்காணிக்க 30 குழுக்கள் சென்னையில் அமைக்கப்பட்டது. அதிகாரிகள், போலீசார் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. மக்களை சென்னை முழுக்க கண்காணிக்க இந்த குழு களமிறக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாளையில் இருந்து சென்னை முழுக்க தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள்.

ரோந்து
சென்னையில் தேவையின்றி வெளியே செல்லும் நபர்கள், 12 மணிக்கு பின் திறக்கப்படும் கடைகள், பைக்கில் சுற்றும் நபர்கள் எல்லோரையும் விசாரிக்கவும், அபராதம் விதிக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். விதிகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இதனால் நாளையில் இருந்து சென்னையில் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications