போனை போட்ட மோடி அலுவலகம்.. பறந்த ஆர்டர்! எல்லாம் மாறிடுச்சே.. சென்னையில் நடக்கும் தரமான சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் (CMRL) பறக்கும் ரயில் (MRTS) இணைப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த திட்டத்தை விரைவுபடுத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

metro

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: முக்கிய அம்சங்கள்

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சுமார் 90% பணிகள் நிறைவடைந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னக ரயில்வே இந்த திட்டத்தை காலதாமதப்படுத்திய நிலையில், தற்போது பிரதமர் அலுவலகம் இதில் நேரடியாக ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது அளித்த மனுவில், சென்னை பறக்கும் ரயில் சேவையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி தென்னக ரயில்வேயின் தாமதத்தைக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் ரயில்வே வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் (CUMTA) அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இந்த திட்டப் பணியை விரைவுபடுத்தும்படி பிரதமர் அலுவலகம் ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேயிடம் மூன்று கேள்விகளை எழுப்பியது. ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

ரயில்வே வாரியம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் (CUMTA) கடந்த இரண்டு வருடங்களாக இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2024 பிப்ரவரி மாதம் இது தொடர்பான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பியது. ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில், பறக்கும் ரயில் நிலையத்தை கையகப்படுத்தும். இதைத் தொடர்ந்து, பறக்கும் ரயில் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. CMRL மல்டி மாடல் ஹப்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

சென்னையில், புறநகர் மற்றும் MRTS ரயில்கள் அல்லது மெட்ரோ ரயில் பாதைகளுக்கு பயணிகள் எளிதாக மாற முடியும். 23 இடங்களில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. 2026-ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்போது இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும். சர்வதேச நாடுகளில் உள்ள இந்த வசதி விரைவில் சென்னையில் அமலுக்கு வரவுள்ளது.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் திட்ட அறிக்கையின்படி, பறக்கும் ரயில் சேவையின் ஒரு வருட இயக்கச் செலவு சுமார் ரூ.104 கோடி. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.50 கோடி மட்டுமே. மெட்ரோ ரயில் திட்டம் நீண்ட காலமாக தாமதமாகி வருவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருவான்மியூர் மற்றும் திருமயிலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் MRTS நிலையங்களுடனும், மந்தவெளி மற்றும் மாதவரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களுடனும் இணைக்கப்படும். மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ. மெட்ரோவில் ஒன்பது மையங்கள் அமைக்கப்படும்.

கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26.1 கி.மீ மெட்ரோ-4ல், கோடம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி பேருந்து நிலையம், நந்தனம் மற்றும் வடபழனி ஆகிய ஐந்து மையங்கள் அமைக்கப்படும். 44.6 கி.மீ மெட்ரோ-5ல், மாதவரம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், அண்ணாநகர், கோயம்பேடு, ஆலந்தூர், செயின்ட் தோ வில்லிவாக்கம், வாணுவம்பேட்டை, கீழ்கட்டளை ஆகிய இடங்களில் ஒன்பது மையங்கள் அமைக்கப்படும்.

விரைவில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை (MRTS) கையகப்படுத்தும். பறக்கும் ரயில் நிலையத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் ஒருசேர மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்கூறிய அனைத்து நடவடிக்கைகளும், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகளை ஒருங்கிணைத்து, பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+