மார்ச் 15, 16-ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்... விழிப்பாக இருங்க... 4 நாட்கள் சேவை பாதிக்கும் அபாயம்!
சென்னை: நாடு முழுவதும் மார்ச் 15 மற்றும் 16-ம் தேதியில் 2 நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனை கண்டித்து நாடு முழுவதும் மார்ச் 15 மற்றும் 16-ம் தேதியில் 2 நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது. இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்துகொள் வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கிகள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று வங்கி கூட்டமைப்பு இன்று மீண்டும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கிகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது:- வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும். மத்திய அரசின் அறிவிப்பால் வங்கிகளுக்கு மட்டும் பாதிப்பில்லை.
பொதுமக்களுக்கும் பாதிப்பு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு இருக்கிறது. எனவே அனைத்து பொதுமக்களும் எங்களின் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து எங்களின் போராட்டம் வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.
-
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications