பிபிசி ஆவணப்பட தடை.. மத்திய அரசுக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் சமூக செயல்பாட்டாளர்கள் போராட்டம்
இன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை போலீசாரிடம் இந்த அமைப்பு அனுமதி கோரியது.
சென்னை: பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் India: the Modi question ஆவண படத்தை தடை செய்திருக்கும் மத்திய அரசை கண்டித்து சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் சார்பாக இன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
குஜராத் கலவரம் குறித்து பிபிசி இயக்கியுள்ள ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அதுவும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி நடந்த கலவரத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதே அளவில் மக்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறியது.

பிபிசி
இந்நிலையில், இந்த கலவரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இதனையடுத்து பிரிட்டிஷ் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தியது.இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிபிசி செய்தி ஊடகம் சமீபத்தில் 'India: The Modi Question' எனும் ஆவணப்படத்தை இயக்கியது. இந்த ஆவணப்படத்தில் உண்மைக்கு மாறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் கடும் அமளியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்
இதையடுத்து BBC செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் India: the Modi question ஆவண படத்தை தடை செய்திருக்கும் மத்திய அரசை கண்டித்து சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் சார்பாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை போலீசாரிடம் இந்த அமைப்பு அனுமதி கோரியது.
பரிசீலனைக்குப் பின், மனுதாரர் இன்று மாலை 4 மணியளவில் சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் - காவல் உதவி ஆணையாளர் குறிப்பிடும் இடத்தில் குழுமி சுமார் 100 (நூறு) நபர்கள் மிகாமல் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளின்படி அமைதியான - முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. .

ஆவணப்படம்
மேலும், ஆர்ப்பாட்டம் மாலை 5 மணிக்குள் முடிக்கப்படவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நீடித்தல் கூடாது. ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் கலந்து கொண்டவர்கள் அமைதியாக கலைந்து செல்லவேண்டும். காவல்துறையின் வரையறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடத்தப்படவேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் வாகனங்களை ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தில்/பகுதியில் கொண்டுவரக் கூடாது. ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்குள் முடிக்கப்படவேண்டும்.

ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். போக்குவரத்திற்கு எவ்விதத்திலும் இடையூறு இல்லாமல், வாகனங்கள் ஒழுங்காகச் செல்ல பொதுமக்கள் ஒழுங்காக சென்று வர ஒத்துழைக்கவேண்டும். பொதுமக்கள் தங்களது அன்றாட அலுவல்களைச் செய்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். காவல் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவேண்டும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்திடல் கூடாது. பிற மதத்தினர் / இனத்தினர் / தனிப்பட்ட நபர்கள் / அரசியல் தலைவர்கள் / அதிகாரிகள் மீது தாக்கிப் பேசுவதோ, மனம் புண்படும்படியான ஆட்சேபகரமான சட்டப்புறம்பான பேச்சுக்கள் பேசவோ, முழக்கங்கள் எழுப்பவோ, பதாகைகள் மூலமாக வெளிப்படுத்தவோ கூடாது.

விதிமுறை
ஆர்ப்பாட்டம் தொடர்பாக அமைக்கப்படும் பேனர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூம்புவடிவ ஒலிபெருக்கி உபயோகப்படுத்தக்கூடாது. மீறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் உருவ பொம்மைகளை கொண்டு வரவோ / எரிக்கவோகூடாது, போன்ற அக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications