உயரும் வேக்சின் தேவை.. உற்பத்தியை அதிகரிக்கும் சீரம் மற்றும் பாரத் பயோடெக்.. புதிய டார்கெட் நிர்ணயம்
சென்னை: பாரத் பயோடெக் நிறுவனம்மற்றும் சீரம் இன்ஸ்டியூட் இரண்டும் வேக்சின் உற்பத்தியை வரும் மாதங்களில் உயர்த்த போவதாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா வேக்சின்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநிலங்கள் அனைத்திற்கும் சரியான அளவில் வேக்சின்களை ஒதுக்க முடியாமல் மத்திய அரசு கடுமையாக திணறி வருகிறது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டியூட் உற்பத்தி செய்யும் ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகாவின் கோவிட்ஷீல்ட் இரண்டும் பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் என்ன
ஆனால் மாநில அரசுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்த வேக்சின் உற்பத்தி வேகமாக நடக்கவில்லை. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறையும், மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகமும் இது தொடர்பாக இரண்டு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு இருந்தது. வரும் மாதங்களில் வேக்சின் உற்பத்தி எப்படி நடக்கும் என்று இந்த 2 நிறுவனங்களிடமும் மத்திய அரசு பிளான் கேட்டு இருந்தது.

பதில்
இதற்கு பாரத் பயோடெக் இயக்குனர் கிருஷ்ணா மோகன் அளித்த பதிலில், கோவேக்சின் உற்பத்தி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் இதன் உற்பத்தி 3.32 கோடியாக உயர்த்தப்படும். ஆகஸ்ட் மாதம் இதன் உற்பத்தி 7.82 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். செப்டம்பரில் இதே அளவு உற்பத்தி செய்யப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

சீரம்
சீரம் நிறுவனத்தின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் அளித்த பதிலில், ஆகஸ்ட் மாதம் 10 கோடி வேக்சினை உற்பத்தி செய்யும் வகையில் உற்பத்தி உயர்த்தப்படும். ஜூன், ஜூலை மாதங்களிலும் அதற்கு ஏற்றபடி உற்பத்தி உயர்த்தப்படும். கண்டிப்பாக மாத உற்பத்தியை ஆகஸ்டில் 10 கோடி கொண்டு செல்லும் வகையில் உற்பத்தியை பெருக்குவோம் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி
இந்தியாவில் வேக்சின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இரண்டு நிறுவனங்களும் உற்பத்தியை பெருக்க முடிவு செய்துள்ளன. மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க உற்பத்தியை இந்த நிறுவனங்கள் அதிகரிக்கும். அதே சமயம் இதில் சில டோஸ்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications