தடை விதியுங்கள்.. உதயநிதியை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது.. தேர்தல் கமிஷனில் பாஜக புகார்!
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்து, அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் இரண்டு நாட்களே மட்டுமே பிரச்சாரம் மீதம் உள்ள நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதில் சில அரசியல் தலைவர்கள் செய்யும் தேர்தல் பிரச்சாரம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன் திமுக எம்பி ஆ. ராசா முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதில் ஆ. ராசாவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆ. ராசா 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என்று நேற்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்து, அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு இவரின் பிரச்சாரத்திற்கு தடை விதித்து, நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் இருந்தும் நீக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று தாராபுரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மறைந்த அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோரின் மறைவிற்கு பிரதமர் மோடி கொடுத்த தொல்லைதான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
உதயநிதியின் இந்த பேச்சு தேசிய அளவில் சர்ச்சையானது.
தேசிய பாஜக தலைவர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அதோடு உதயநிதி ஸ்டாலினுக்கு சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி பக்ஷி ஆகியோர் உதயநிதியின் விமர்சனத்திற்கு கோபமாக பதிலடி கொடுத்தனர்.
இறந்தவர்கள் குறித்து தவறாக பேச வேண்டாம் என்று உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். உதயநிதியின் பேச்சு சர்ச்சையான நிலையில் அவரின் வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்து, அவை தேர்தலில் போட்டியிட விடாமல் தடை செய்ய வேண்டும் என்று பாஜக சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் வைக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications