Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆருத்ரா.. அடுத்து யாரு? வளையத்தில் விஐபி ‘பி.ஏக்கள்’.. பாஜக புள்ளிகளை நெருங்கிய போலீஸ்.. பரபர தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆருத்ரா நிதி மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் மீதான பிடி இறுகுவதால், முக்கிய புள்ளிகள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. மாநில பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பலர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்களின் உதவியாளர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வந்திருக்கிறார்களாம்.

பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால், அவர்களின் உதவியாளர்களும் விசாரணையில் நெருக்கப்படுவார்கள் என்பதால், நிர்வாகிகளின் பி.ஏக்களிடம் போலீசார் ப்ரெய்ன் வாஷ் செய்து ரகசியமாக ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் மீதான பிடி இறுகுவதன் காரணமாகவே பலர் கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது.

BJP office bearers under police monitor in aruthra finance scam investigation

ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதை உண்மை என நம்பி அந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், உறுதியளித்தபடி ஆருத்ரா நிறுவனம் வட்டி வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்து 11 பேரை கைது செய்தனர்.

பாஜக நிர்வாகி : இந்த வழக்கில் ஆருந்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்கள் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய நிலையில் இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரீஷ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஹரீஷ் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநில செயலாளராக இருந்துள்ளார்.

BJP office bearers under police monitor in aruthra finance scam investigation

பாஜகவில் விளையாட்டு பிரிவில் மாநிலப் பொறுப்பை பெறுவதற்காக, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு தான் திருப்பித் தர வேண்டிய பணத்திலிருந்து பாஜகவை சேர்ந்த சில நபர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் ஹரீஷ் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

ஒப்புக்கொண்ட ஹரீஷ் : அதன்படி ஹரீஷ் பணம் கொடுத்ததாகக் கூறப்பட்ட பல்லாவரத்தைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ், ராணிப்பேட்டை பாஜக மாவட்ட பொறுப்பில் உள்ள டாக்டர் சுதாகர் ஆகிய இருவருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். அவர்கள் இருவரும் நேற்று நேரில் ஆஜராகி பதில் அளித்துள்ளனர்.

ஏற்கனவே நடிகரும் தயாரிப்பாளருமான பாஜகவை சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் 15 கோடி ரூபாய் பெற்றதாக புகார் எழுந்த நிலையில் அவரையும் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அவர் தலைமறைவாகியுள்ளார். ஆருத்ரா விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளதால் மோசடியில் தொடர்புடைய மேலும் சில முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

BJP office bearers under police monitor in aruthra finance scam investigation

கண்காணிப்பு வளையத்தில் உதவியாளர்கள் : பாஜக விளையாட்டு பிரிவின் மாநில நிர்வாகி ஹரீஷிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில பாஜகவின் முன்னணி நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதும் அம்பலமாகியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆருத்ரா வழக்கில் தொடர்புடைய பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும், அவர்களின் உதவியாளர்களை போலீசார் வளைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆருத்ரா மோசடியில் பாஜக நிர்வாகிக்கு இருக்கும் தொடர்புகளுக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன, அவர்கள் சிக்கினால் பி.ஏக்களான நீங்களும் விசாரணையின் பிடியில் வருவீர்கள் என பிரெய்ன் வாஷ் செய்து கூடுதல் தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனராம்.

பாஜக முக்கிய புள்ளிகளின் மீதான போலீசாரின் பிடி இறுகுவது, பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருவதால், பல நிர்வாகிகள், கட்சியினரை சந்திப்பதையே சமீப சில நாட்களாகத் தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வெகு விரைவில் : சமீப காலமாக, பாஜகவில் இருந்து முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் விலகுவதற்கும், இந்த ஆருத்ரா வழக்கின் பிடி சிலர் மீது இறுகுவதே காரணம் என்றும் கூறப்படுகிறது. இன்று கூட பாஜகவில் இருந்து விலகியுள்ள பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு, ஆருத்ரா மோசடியில் பாஜகவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் பாஜகவின் முக்கியமான புள்ளிகள் ஆருத்ரா வழக்கில் அதிரடியாக கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இப்போது கைது நடவடிக்கை மேற்கொண்டால், சட்டப்பேரவையில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு இந்த கைது நடவடிக்கை இருக்கலாம் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+