காங்கிரஸுடன் 70 சீட்டுக்கு டீல் முடித்த தவெக? சட்டென "அவரை" அழைத்த டெல்லி பாஜக? முடிவை மாற்றிய விஜய்
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என தவெகவுக்கு பாஜக உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தவெக தனித்து போட்டியிடும் என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் 16-ஆவது சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்து ஏப்ரல் மாதத்தில் 17-ஆவது சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் சூழல் உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி எனற கொள்கையுடன் தமிழகத்தில் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய விஜய், ஆட்சியில் பங்கு என்று முழங்கினார். 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் இதுவரை ஆட்சியில் பங்கு என்று இருந்ததே இல்லை.
விஜய்யின் ஆஃபரை காங்கிரஸ் கட்சி உற்று பார்த்தது. இதனால் விஜய்யுடன் கூட்டணி சேரவும் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள், 1 துணை முதல்வர் பதவி, 6 அமைச்சர் பதவிகள், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் 28 தொகுதிகள் என தவெக தரப்பில் இருந்து வாக்குறுதிகள் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டதாம். இத்தனை ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் இருந்து ஆட்சியில் பங்கு என்ற காணகிடைக்காத விஷயங்களை விஜய் சொன்னதால் காங்கிரஸ் மகிழ்ச்சி அடைந்ததாம்.
இதனால் எப்படி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யின் ஆஃபர்களை அனுபவிப்பது என யோசித்ததாம். அப்போதுதான் திமுகவிடம் 41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இடங்கள் என காங்கிரஸ் வலியுறுத்தியதாம்.
இந்த நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவைக் கூட திமுக தலைமை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை அறிந்து கொண்ட டெல்லி தலைமை, என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்ததாம்.
இந்த நிலையில்தான் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய்யின் அரசியல் ஆலோசகரான விஷ்ணு ரெட்டி, டெல்லி சென்று பாஜக தலைமையை சந்தித்தாராம். அப்போது அவரிடம் "ஒன்னு எங்க கூட நீங்கள் கூட்டணிக்கு வரணும். இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுங்கள். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கக் கூடாது" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் சென்சார் பிரச்சினையை கிளியர் செய்து ஜனநாயகன் படம் வெளிவர உதவி செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டதாம். இதனால் அவர் தவெக தனித்தே போட்டியிடும் என சொல்லப்படுகிறது. மேலும் தவெகவுக்கு வாக்கு சதவீதம் இல்லை என திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருவதால் தங்களது பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என விஜய் கருதுவதாக சொல்லப்படுகிறது.
-
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications